குழந்தை பாக்கியம் கிடைக்க

குழந்தை பாக்கியம் கிடைக்க

குழந்தையின்மை என்ற குறை கணவன், மனைவி இருவரும் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் குறை இருக்கலாம். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் எந்தவித கட்டுபாட்டுடன் இல்லாமல் இருந்தும் குழந்தைபேறு இல்லை என்றால் கணவன் மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆண்களைப் பொறுத்தவரை சில பிறவிக் குறைபாடுகள் தவிர சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுவினாலும், கெமிக்கல் தொழிற்சாலைகள், ஆஸ்பெஸ்ட்டாஸ் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் ஆழ்கடல் மூழ்குதல் போன்ற தொழில்களில் ஈடுபடுபம் ஆண்களுக்கு விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து மலட்டுத்தன்மை ஏற்பட ஏதுவாகிறது. மேலும் சிறுவயதில் ஏற்பட்ட புட்டாலம்மை, சின்னம்மை போன்றவைகளின் தாக்கமும் மற்றும் சிலருக்கு ஏற்பட்ட பால்வினை நோய்களின் தாக்கமும் உயிரணுக்களின் வீரியத்தை குறைத்தும் அணுக்கள் வெளியேறாது தடைகள் ஏற்படுத்தியும் மலட்டுத்தன்மையை உண்டுபண்ணுகிறது.

பெண்களைப் பொறுத்தவரை குழந்தையின்மைக்கான காணங்கள் ஆண்களைவிட சற்று அதிகமாகவே காணப்படுகிறது. உளவியல் ரீதியாக பார்க்கும் போது இளவயது திருமணம், மனபக்குவம் அடையாமல் தாம்பத்ய உறவை நினைத்து பயம், அருவருப்பு, மன உளைச்சல், மன இறுக்கம், மன வேதனை, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், வேகமும் மன அழுத்தமும் உள்ள எந்திர வாழ்க்கை போன்றவை காரணங்களாகின்றன. இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள். வேகமும், பரபரப்பும், மன அழுத்தமும் உள்ள எந்திர வாழ்க்கை. குடும்பத்தில் உள்ள மாமியார், நாத்தனார், கொளுந்தியாள் ஆகியோரின் இழிசொற்கள். மலடி என்னும் பெயர். அதனால் ஏற்படும் மன அழுத்தம்.

மன அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கைமுறை, சிந்தனைகளினால் வருவது. ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் போன்ற காரணங்களாலும் மனஅழுத்தம் உண்டாகிறது. சக மனிதன் மீதான அக்கரை விலகி சுயநலச் சிந்தனைகள் விசுவரூபமெடுக்கும்போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன. மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல்லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதியாக அழுத்தமான சூழலுக்கு உள்ளாகும் பொது மக்கள். புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம்முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப்படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ளவேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம். ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும்.

தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சுவலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், எடை குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய், என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம். மன அழுத்தம் சிலவேளைகளில் நாமாகவே கர்ப்பித்துக் கொள்ளும் தவறான சிந்தனைகளின் மூலமாகவும் வரும் என்பது கண்கூடு. தேர்வை நன்றாக எழுதிய மாணாக்கர் கூட மன அழுத்தத்துடன் திரிவது இதனால் தான்.

எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்.

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும் வேலை செய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைபேசிகளையும், தொலை பேசிகளையும் அணைத்து விடுங்கள். எந்த தொந்தரவும் இன்றி ஓய்வு எடுங்கள்.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* கிடைத்ததைக் கொண்டு போதுமென்ற மனதுடன் எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, ஆலயங்கள், கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

சோதிடம் சொல்வது:

5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.
ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஐந்தாம் வீட்டிற்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். உதாரணமாக கடக லக்னத்தை உடைய ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 5ஆம் வீடு விருச்சிகம் (செவ்வாய்). ஆனால் அவரது ஜாதகத்தில் செவ்வாய் 8இல் மறைந்திருந்தது. அவருக்கு 5ஆம் இடத்தில் எந்தப் பாவ கிரகமும் கிடையாது. ஆனால் 5க்கு உரிய கிரகம் 8இல் மறைந்திருப்பதால், மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக, புத்திர தோசத்திற்கு உண்டான பரிகாரங்களைச் செய்யுங்கள்.

பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.

பாட்டி வைத்தியம்:

தேங்காய் துவையலில் கசகசாவை சேர்த்து வைத்து அரைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு குறையும்.

ஆண்மை குறைபாடு குறைய http://www.grannytherapy.com/tam/2012/03/ஆண்மைகுறைப்பாடுகுறைய/

செய்யவேண்டியதெல்லாவற்றையும் செய்தாயிற்று. பார்க்கவேண்டிய வைத்தியம் முழுவதும் பார்த்தாகிவிட்டது. இனி ஆண்டவன் தான் கதி என்னும் வசதி படைத்தோர் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று சரணாகதி அடைந்துவிட்டேன் என்று ஓர்மையான மனத்துடன் வேண்டுங்கள். ஒருமித்த மனதில் மாமியார், நாத்தனார், கொளுந்தியாள் ஆகியோரின் இழிசொற்கள் ஒலிக்காது. மனம் இலேசாகிவிடும். தம்பதியிடம் தனிமையில் நெருக்கம் அதிகரிக்கும். இதனால் ஒரு வேளை கருத்தரிக்கலாம். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.

பிரகதீஸ்வரர் கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர

முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி

ஆலப்புழை

ஆலப்புழை

மலையாள மகாலட்சுமி

பள்ளிப்புரம்

ஆலப்புழை

முருகன் ஹரிப்பாடு ஆலப்புழை
அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) இராமேஸ்வரம் இராமநாதபுரம்
இராமநாதர் இராமேஸ்வரம் இராமநாதபுரம்
ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் இராமேஸ்வரம் இராமநாதபுரம்
வெயிலுகந்த விநாயகர் உப்பூர் இராமநாதபுரம்

நம்புநாயகி அம்மன்

தனுக்(ஷ்)கோடி

இராமநாதபுரம்

ஆதிஜெகநாதப் பெருமாள் திருப்புல்லாணி இராமநாதபுரம்
ஆதிரத்தினேஸ்வரர் திருவாடானை இராமநாதபுரம்
பத்திரகாளி அம்மன் அந்தியூர் ஈரோடு

தம்பிராட்டியம்மன்

ஈங்கூர்

ஈரோடு

கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஈரோடு ஈரோடு

கொங்காலம்மன்

ஈரோடு

ஈரோடு

மகிமாலீஸ்வரர் ஈரோடு ஈரோடு

சின்ன மாரியம்மன்

கருங்கல்பாளையம்

ஈரோடு

மகுடேஸ்வரர் கொடுமுடி ஈரோடு

சாரதா மாரியம்மன்

கோபிசெட்டிப்பாளையம்

ஈரோடு

ராமலிங்க சவுடேசுவரி

தாசப்பக்கவுடர்புதூர்

ஈரோடு

ஆதிகேசவரப்பெருமாள் சுவாமி பவானி ஈரோடு
காயத்ரி லிங்கேஸ்வரர் பவானி ஈரோடு
சங்கமேஸ்வரர் பவானி ஈரோடு

கொண்டத்து காளியம்மன்

பாரியூர்

ஈரோடு

பெரிய மாரியம்மன்

பிரப் ரோடு

ஈரோடு

கோட்டை முனீஸ்வரர் பெருந்துறை ஈரோடு

இராகவேந்திரர்

ஈரோடு

ஈரோடு

ஆருத்ரா கபாலீஸ்வரர் எழுமாத்தூர் ஈரோடு
இலட்சுமி நாராயணர் புதூர் ஈரோடு
வனவேங்கடப் பெருமாள் பெருந்துறை ஈரோடு
கருப்பண்ணசாமி பொய்யேரிக்கரை ஈரோடு
கிருஷ்ணர் உடுப்பி உடுப்பி
லெட்சுமணப்பெருமாள் திருமூழிக்களம் எர்ணாகுளம்
திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) இராஜேந்திர பட்டினம் கடலூர்

வெற்றிவேல் முருகன்

சி.மானம்பட்டி

கடலூர்
தில்லை நடராஜர் சிதம்பரம் கடலூர்
பால்வண்ணநாதர் திருக்கழிப்பாலை கடலூர்
பாடலீஸ்வரர் திருப்பாதிரிபுலியூர் கடலூர்
வாமனபுரீஸ்வரர் திருமாணிக்குழி கடலூர்

சிவசுப்பிரமணியசுவாமி

புதுவண்டிப்பாளையம்

கடலூர்

கொளஞ்சியப்பர் மணவாளநல்லூர்விருத்தாசலம் கடலூர்

சிவசுப்பிரமணியர்

வில்லுடையான் பட்டு

கடலூர்
பகவதி அம்மன் மண்டைக்காடு கன்னியாகுமரி

பாம்பலம்மன்

இலட்சுமணம்பட்டி

கரூர்

கல்யாண வெங்கடரமண சுவாமி தான்தோன்றிமலை கரூர்

மகாலட்சுமி

மேட்டு மகாதானபுரம்

கரூர்

பாலசுப்பிரமணியர்

வெண்ணெய் மலை

கரூர்

பாலசுப்ரமணிய சுவாமி

வேலாயுதம்பாளையம்

கரூர்

காமாக்யாதேவி

கவுகாத்தி

கவுகாத்தி

உடையீஸ்வரர் இளநகர் காஞ்சிபுரம்
ஆதிகாமாட்சி காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
பச்சைவண்ணப்

பெருமாள்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
முக்தீஸ்வரர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
உலகளந்த பெருமாள் திருஊரகம் காஞ்சிபுரம்
வேதகிரீஸ்வரர் திருக்கழுகுன்றம் காஞ்சிபுரம்
விஜயராகவப் பெருமாள் திருப்புட்குழி காஞ்சிபுரம்
வியாக்ரபுரீஸ்வரர் திருப்புலிவனம் காஞ்சிபுரம்
திருமாகறலீஸ்வரர் திருமாகறல் காஞ்சிபுரம்
விளக்கொளி பெருமாள் தூப்புல் காஞ்சிபுரம்
பிரம்மபுரீஸ்வரர் உடனுறை பட்டுவதனாம்பிகை பெருநகர் காஞ்சிபுரம்
ஏரிகாத்த இராமர் மதுராந்தகம் காஞ்சிபுரம்

காமாட்சி அம்மன்

மாங்காடு

காஞ்சிபுரம்

கன்யாகுமரி ஜய அனுமன் தாம்பரம் காஞ்சிபுரம்
ஐராவதேஸ்வரர் அத்திமுகம் ஓசூர் கிருஷ்ணகிரி
சந்திரசூடேசுவரர் ஓசூர் கிருஷ்ணகிரி
காலபைரவர் கல்லுக்குறிக்கை கிருஷ்ணகிரி
ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி ஓசூர் கிருஷ்ணகிரி
துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் ஜகத் மந்திர்‘”) துவாரகை குஜராத்

சுவாமி நாராயணர்

அக்ஷர்தாம்

குஜராத்

திருக்காலடியப்பன் காலடி கேரளா
பூர்ணத்திரயேஸ்வரர் திருப்பூனித்துறை கேரளா
மகாதேவர் திருவைராணிக்குளம் கேரளா

ஐயப்பன்

ஆரியங்காவு

கொல்லம்

சுப்ரமணியர் கிடங்கூர் கோட்டயம்
பகவதி அம்மன் குமாரநல்லூர் கோட்டயம்
மள்ளியூர் மகா கணபதி கோட்டயம் கோட்டயம்

சக்குளத்துகாவு பகவதி

சக்குளத்துக்காவு

கோட்டயம்

சரசுவதிஅம்மன்

பனிசிகாடு

கோட்டயம்

சுப்ரமணியர்

அனுவாவி

கோயம்புத்தூர்

வேலாயுதர் கிணத்துக்கடவு

கோயம்புத்தூர்

கல்யாணவரதராஜர் கொழுமம் கோயம்புத்தூர்

கோனியம்மன்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

சூலக்கல் மாரியம்மன்

சூலக்கல்

கோயம்புத்தூர்

அமணலிங்கேஸ்வரர் தளி திருமூர்த்தி மலை கோயம்புத்தூர்
திருமுருகநாதர் திருமுருகன்பூண்டி கோயம்புத்தூர்

வனபத்ரகாளியம்மன்

தேக்கம்பட்டி

கோயம்புத்தூர்

கொண்டத்துக்காளியம்மன்

பெருமாநல்லூர்

கோயம்புத்தூர்

தண்டாயுதபாணி மருதமலை கோயம்புத்தூர்
முத்துமலை முருகன் முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு கோயம்புத்தூர்
திருவேங்கடமுடையான் அரியக்குடி சிவகங்கை

கொப்புடை நாயகி அம்மன்

காரைக்குடி

சிவகங்கை

உருத்ரகோடீஸ்வரர் சதுர்வேதி மங்கலம் சிவகங்கை
திருநோக்கிய அழகிய நாதர் திருப்பாச்சேத்தி சிவகங்கை
மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சேக்கிழார்) தேவகோட்டை சிவகங்கை
தட்சிணாமூர்த்தி பட்டமங்கலம் சிவகங்கை
விநாயகர் பிள்ளையார்பட்டி சிவகங்கை

பிள்ளைவயல் காளியம்மன்

பிள்ளைவயல், பையூர்

சிவகங்கை

சோமநாத சுவாமி (ஆனந்தவல்லி) மானாமதுரை சிவகங்கை
பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) கீழப்பூங்குடி சிவகங்கை

கண்ணுடைய நாயகி அம்மன்

நாட்டரசன்கோட்டை

சிவகங்கை

பஞ்சமுக அனுமன்

கவுரிவாக்கம்

சென்னை

பாலசுப்பிரமணியர் குமரன்குன்றம், குரோம்பேட்டை

சென்னை

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சவுகார்பேட்டை சென்னை
பட்டினத்தார்

திருவொற்றியூர்

சென்னை

தர்மலிங்கேஸ்வரர் (சர்வமங்களா தேவி ) நங்கநல்லூர் சென்னை
கச்சாலீஸ்வரர் பாரிமுனை சென்னை

அட்டலட்சுமி

பெசன்ட் நகர்சென்னை

சென்னை

இராமநாதீஸ்வரர் போரூர், சென்னை சென்னை
பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் மேற்கு சைதாப்பேட்டை சென்னை
வடபழநி ஆண்டவர் வடபழநி சென்னை
சவுமிய தாமோதரப்பெருமாள் வில்லிவாக்கம் சென்னை
வைகுண்ட

வாசப்பெருமாள்

கோயம்பேடு சென்னை

லட்சுமி குபேரர்

வண்டலூர், இரத்தினமங்கலம்

சென்னை

தலையாட்டி விநாயகர் ஆத்தூர் சேலம்
வாகனப் பிள்ளையார் ஆத்தூர் சேலம்

கந்தாஸ்ரமம்

உடையாபட்டி

சேலம்
கரபுரநாதர் உத்தமசோழபுரம் சேலம்

பாலமுருகன்

கஞ்சமலை

சேலம்
வீரபத்திரர் குகை, சேலம் சேலம்

தண்டாயுதபாணி

குமரகிரி

சேலம்
அறப்பளீஸ்வரர் கொல்லிமலை சேலம்
ஐயப்பன் சாஸ்தாநகர் சேலம்
அழகிரிநாதர் சேலம் சேலம்
சுகவனேஸ்வரர் சேலம் சேலம்
ராஜகணபதி சேலம் சேலம்

கண்ணனூர் மாரியம்மன்

தாரமங்கலம்

சேலம்

கைலாசநாதர் தாரமங்கலம் சேலம்
பரமத்தி பீமேஸ்வரர் பரமத்திவேலூர், மாவுரெட்டி சேலம்
முனியப்பன் வெண்ணங்கொடி சேலம்
கோதண்டபாணி ராமர் அயோத்தியாப்பட்டணம் சேலம்
கைலாசநாதர் (துர்கா பரமேஸ்வரி ) அம்மன்குடி தஞ்சாவூர்

பிரத்யங்கிராதேவி

அய்யாவாடி

தஞ்சாவூர்

காளஹஸ்தீஸ்வரர் கதிராமங்கலம் தஞ்சாவூர்

காமாட்சி அம்மன்

குன்னியூர்

தஞ்சாவூர்

அகோர வீரபத்திரர் கும்பகோணம் தஞ்சாவூர்
சிவகுருநாதர் சிவபுரம் தஞ்சாவூர்

கோடியம்மன்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

பிரகதீசுவரர் தஞ்சாவூர் தஞ்சாவூர்

பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

கைலாசநாதர் திங்களூர் தஞ்சாவூர்
செம்மேனிநாதர் திருக்கானூர் தஞ்சாவூர்
சாட்சிநாதேஸ்வரர் திருப்புறம்பியம் தஞ்சாவூர்
பிராணநாதேசுவரர் திருமங்கலக்குடி தஞ்சாவூர்
ஜோதி மகாலிங்க சுவாமி திருவிடைமருதூர் தஞ்சாவூர்
ரிஷிபுரீஸ்வரர் திருவிடைமருதூர் தஞ்சாவூர்
ஐயாறப்பன் திருவையாறு தஞ்சாவூர்
திருநறையூர் நம்பி நாச்சியார்கோயில் தஞ்சாவூர்
சுந்தரேஸ்வரர் நெய்க் குப்பை தஞ்சாவூர்
புராதனவனேஸ்வரர் (பெரியநாயகி ) பட்டுக்கோட்டை தஞ்சாவூர்
சோமநாதர் பெருமகளூர் தஞ்சாவூர்

முத்துமாரியம்மன்

மணலூர்

தஞ்சாவூர்

பரசுநாதசுவாமி முழையூர் தஞ்சாவூர்
புஷ்பவனேஸ்வரர் மேலைத்திருப்பூந்

துருத்தி

தஞ்சாவூர்
இலட்சுமிநாராயணர் வரகூர் தஞ்சாவூர்

ஏகவுரி அம்மன்

வல்லம்

தஞ்சாவூர்

கும்பேசுவரர் கும்பகோணம் தஞ்சாவூர்
சுயம்புலிங்கேஸ்வரர் அமானிமல்லாபுரம் தர்மபுரி
தீர்த்தகிரீசுவரர் தீர்த்தமலை தர்மபுரி
சென்னகேஸ்வர பெருமாள் கோவிலூர் தர்மபுரி

முத்தாலம்மன்

அகரம், தாடிக்கொம்பு

திண்டுக்கல்

மூங்கிலடி அன்னகாமு

ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல்

சென்றாயப்பெருமாள் கோட்டைப்பட்டி

திண்டுக்கல்

மந்தை முத்தாலம்மன்

சிறுகுடி

திண்டுக்கல்

கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல்

திண்டுக்கல்

பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திண்டுக்கல் திண்டுக்கல்
சுப்பிரமணியசுவாமி திருமலைக்கேணி திண்டுக்கல்

ராஜகாளியம்மன்

தெத்துப்பட்டி

திண்டுக்கல்

மாரியம்மன்

நத்தம்

திண்டுக்கல்

கோபிநாத சுவாமி

ரெட்டியார்சத்திரம்

திண்டுக்கல்

ஆதிமாரியம்மன் S.கண்ணனூர் திருச்சி
மருதாந்தநாதேஸ்வரர் ஆங்கரை, லால்குடி திருச்சி
உத்தமர் உத்தமர் கோவில் திருச்சி
காசி விஸ்வநாத சுவாமி (விசாலாட்சி) கீழசிந்தாமணி, திருச்சி திருச்சி
நெடுங்களநாதர் திருநெடுங்குளம் திருச்சி
பிரம்மபுரீஸ்வரர் திருப்பட்டூர் திருச்சி
ஆதிமூலேஸ்வரர் திருப்பாற்றுறை திருச்சி
மாற்றுரைவரதீஸ்வரர் திருவாசி திருச்சி
புண்டரீகாட்சப் பெருமாள் திருவெள்ளறை திருச்சி
அங்காளபரமேஸ்வரி துறையூர் திருச்சி

மாரியம்மன்

மணப்பாறை

திருச்சி

உஜ்ஜைனி காளியம்மன்

மாகாளிக்குடி

திருச்சி

சப்தரிஷிஸ்வரர் லால்குடி திருச்சி
பூமிநாதர் மண்ணச்சநல்லூர் திருச்சி
காட்டழகிய சிங்கர் ஸ்ரீரங்கம் திருச்சி
மகாதேவர் திருவஞ்சிக்குளம் திருச்சூர்
அஞ்சேல் பெருமாள் அகரம் திருநெல்வேலி
வீரமார்த்தாண்டேஸ்வரர் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி

பாலசுப்பிரமணியர்

ஆய்க்குடி

திருநெல்வேலி
வன்னியப்பர் ஆழ்வார்குறிச்சி திருநெல்வேலி
இலஞ்சி குமாரர் இலஞ்சி திருநெல்வேலி
சுயம்புலிங்க சுவாமி உவரி திருநெல்வேலி
கோத பரமேஸ்வரர் குன்னத்தூர் திருநெல்வேலி
நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) செப்பறை திருநெல்வேலி
வெங்கடாசலபதி திம்மராஜபுரம் திருநெல்வேலி
காசி விஸ்வநாதர் தென்காசி திருநெல்வேலி
பாபநாசநாதர் பாபநாசம் திருநெல்வேலி

பிட்டாபுரத்து அம்மன்

பிட்டாபுரம்

திருநெல்வேலி

உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) புது பைபாஸ் ரோடு திருநெல்வேலி
சதாசிவ மூர்த்தி புளியறை திருநெல்வேலி
கைலாசநாதர் முறப்பநாடு திருநெல்வேலி
பாண்டுரங்க விட்டலேஸ்வரர் விட்டலாபுரம் திருநெல்வேலி

நீலமணிநாத சுவாமி

கடையநல்லூர்

திருநெல்வேலி

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர்

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலி

வெங்கடாஜலபதி

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலி

வரதராஜப் பெருமாள் திருநெல்வேலி திருநெல்வேலி
மன்னார் இராஜகோபால் சுவாமி பாளையங்கோட்டை திருநெல்வேலி
நவநீதகிருஷ்ணன் மருதூர் திருநெல்வேலி

கோவர்த்தனாம்பிகை

பெருமாநல்லூர்

திருப்பூர்

அங்காளம்மன் முத்தனம் பாளையம் திருப்பூர்
திரு மணிச்சேறை உடையார் இஞ்சிமேடு, பெரணமநல்லூர் திருவண்ணாமலை

முத்துமாரியம்மன்

கீழ்கொடுங்கலூர், வந்தவாசி

திருவண்ணாமலை

வேதபுரீஸ்வரர் செய்யாறு திருவண்ணாமலை
தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் திருப்பனங்காடு திருவண்ணாமலை
ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் தென்னாங்கூர் திருவண்ணாமலை
சுந்தரவரதராஜப்

பெருமாள்

நல்லூர் திருவண்ணாமலை
கைலாசநாதர் நார்த்தம்பூண்டி திருவண்ணாமலை
இராமச்சந்திரப் பெருமாள் நெடுங்குன்றம் திருவண்ணாமலை

ரேணுகாம்பாள்

படவேடு

திருவண்ணாமலை

புத்திரகாமேட்டீஸ்வரர் புதுக்காமூர், ஆரணி திருவண்ணாமலை
கனககிரீசுவரர் தேவிகாபுரம் திருவண்ணாமலை
பிரசன்னவெங்கடேசப் பெருமாள் நல்லூர் திருவண்ணாமலை

வரதஆஞ்சநேயர்

பெரணமல்லூர்

திருவண்ணாமலை

அனந்த பத்மநாபசுவாமி திருவனந்தபுரம் திருவனந்தபுரம்
பாலசுப்பிரமணியசுவாமி ஆண்டார்குப்பம் திருவள்ளூர்
வீரராகவர் திருவள்ளூர் திருவள்ளூர்
சுவாமிநாத பாலமுருகன் மேட்டுக்குப்பம், வானகரம் திருவள்ளூர்
அங்காள பரமேஸ்வரி ராமாபுரம் (புட்லூர்) திருவள்ளூர்
சுந்தரராஜப்பெருமாள் கோயில்பதாகை திருவள்ளூர்
ஜெகந்நாதப்பெருமாள் திருமழிசை திருவள்ளூர்
பாதாளேஸ்வரர் அரித்துவாரமங்கலம் திருவாரூர்
சொர்ணபுரீஸ்வரர் ஆண்டான்கோவில் திருவாரூர்
அசலேஸ்வரர் ஆருர் அரநெறி திருவாரூர்
சற்குணேஸ்வரர் கருவேலி திருவாரூர்
நடுதறியப்பர் கோயில் கண்ணாப்பூர் திருவாரூர்
பொன்வைத்தநாதர் சித்தாய்மூர் திருவாரூர்
ஐராவதீஸ்வரர் திருக்கொட்டாரம் திருவாரூர்
உத்திராபசுபதீஸ்வரர் திருச்செங்காட்டங்குடி திருவாரூர்
நர்த்தனபுரீஸ்வரர் திருத்தலையாலங்காடு திருவாரூர்
அபிஷ்ட வரதராஜர் பெருமாள் திருத்துறைப்பூண்டி திருவாரூர்
பிறவி மருந்தீஸ்வரர் திருத்துறைப்பூண்டி திருவாரூர்
சகலபுவனேஸ்வரர் திருமீயச்சூர் திருவாரூர்
புண்ணியகோடியப்பர் திருவிடைவாசல் திருவாரூர்
வீழிநாதேஸ்வரர் திருவீழிமிழலை திருவாரூர்

நல்ல மாரியம்மன்

தொழுதூர்

திருவாரூர்

சதுரங்க வல்லபநாதர் பூவனூர் திருவாரூர்
பதஞ்சலி மனோகரர் விளமல் திருவாரூர்
ஆதிநாராயணப்பெருமாள் எண்கண் திருவாரூர்
கோதண்டராமர் வடுவூர் திருவாரூர்
கழுகாசலமூர்த்தி கழுகுமலை தூத்துக்குடி
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆண்டிபட்டி தேனி
முத்துக்கருப்பண்ணசுவாமி உத்தமபாளையம் தேனி

கவுமாரியம்மன்

கம்பம்

தேனி

சாமாண்டியம்மன்

சாமாண்டிபுரம், கம்பம்

தேனி

பூலாநந்தீஸ்வரர் சின்னமனூர் தேனி

மூங்கிலணைக் காமாட்சி

தேவதானப்பட்டி

தேனி

கவுமாரியம்மன்

பெரியகுளம்

தேனி

பரமசிவன் (மலைக்கோயில்) போடிநாயக்கனூர் தேனி

கவுமாரியம்மன்

வீரபாண்டி

தேனி

தெட்சிணாமூர்த்தி

வேதபுரி

தேனி

கைலாசநாதர் கைலாசபட்டி தேனி
தான்தோன்றீஸ்வரர் ஆக்கூர் நாகப்பட்டினம்

முருகன்

எட்டுக்குடி

நாகப்பட்டினம்

கண்ணாயிரமுடையார் குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்) நாகப்பட்டினம்
கோடிக்குழகர் கோடியக்காடு நாகப்பட்டினம்
சட்டநாதர், பிரம்மபுரீஸ்வரர் , தோணியப்பர் சீர்காழி நாகப்பட்டினம்
பைரவர் தகட்டூர் நாகப்பட்டினம்
சங்காரண்யேஸ்வரர் தலைச்சங்காடு நாகப்பட்டினம்
குற்றம் பொறுத்த நாதர் தலைஞாயிறு நாகப்பட்டினம்
கோபாலகிருஷ்ணன் திருக்காவளம்பாடி நாகப்பட்டினம்
குந்தளேஸ்வரர் திருக்குரக்கா நாகப்பட்டினம்
பிரம்மபுரீஸ்வரர் திருமயானம் நாகப்பட்டினம்
புருஷோத்தமர் திருவண்

புருசோத்தமம்

நாகப்பட்டினம்
கோமுக்தீஸ்வரர் திருவாவடுதுறை நாகப்பட்டினம்
உச்சிரவனேஸ்வரர் திருவிளநகர் நாகப்பட்டினம்
சொர்ணபுரீஸ்வரர் தெற்கு பொய்கைநல்லூர் நாகப்பட்டினம்
அக்னீஸ்வரர் நல்லாடை நாகப்பட்டினம்
நாகநாதசுவாமி நாகநாதர் சன்னதி நாகப்பட்டினம்
தாமரையாள் கேள்வன் பார்த்தன் பள்ளி நாகப்பட்டினம்
பல்லவனேஸ்வரர் பூம்புகார் நாகப்பட்டினம்

சுப்பிரமணிய சுவாமி

பெரம்பூர் நாகப்பட்டினம்
வதாரண்யேஸ்வரர் (வள்ளலார் கோயில்) மயிலாடுதுறை நாகப்பட்டினம்
வலம்புரநாதர் மேலப்பெரும்பள்ளம் நாகப்பட்டினம்
காத்ர சுந்தரேஸ்வரர் கஞ்சாநகரம் நாகப்பட்டினம்
கிருபாகூபாரேச்வரர் கோமல் நாகப்பட்டினம்
விஸ்வநாதர் சீர்காழி நாகப்பட்டினம்
லோகநாதப்பெருமாள் திருக்கண்ணங்குடி நாகப்பட்டினம்
வீரட்டேசுவரர் வழுவூர் நாகப்பட்டினம்

பாலாஜி கார்த்திகேயன்

செமினரி ஹில்ஸ்

நாக்பூர்

பாலசுப்ரமணியசுவாமி

அலவாய்ப்பட்டி

நாமக்கல்

பிடாரி செல்லாண்டியம்மன்

ஒருவந்தூர்

நாமக்கல்

எயிலிநாதர் நன்செய் இடையாறு பரமத்திவேலூர் நாமக்கல்
ஆஞ்சநேயர் நாமக்கல் நாமக்கல்

பழனியாண்டவர்

பேளுக்குறிச்சி

நாமக்கல்

பாலசுப்பிரமணியர்

மோகனூர்

நாமக்கல்

சந்தைக் கடை மாரியம்மன்

உதகை

நீலகிரி

காசி விஸ்வநாதர் ஊட்டி நீலகிரி

பாலதண்டாயுதபாணி

எல்க் மலை

நீலகிரி

தந்தி மாரியம்மன்

குன்னூர்

நீலகிரி

ஹெத்தையம்மன் நாகராஜர்

மஞ்சக்கம்பை

நீலகிரி
திருவாழ்மார்பன் திருவல்லவாழ் பந்தனம் திட்டா
ஆத்மநாத சுவாமி ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை
பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை குறிச்சி புதுக்கோட்டை

காமாட்சியம்மன்

சத்திரம்

புதுக்கோட்டை

விருத்தபுரீஸ்வரர் திருப்புனவாசல் புதுக்கோட்டை
சத்திய கிரீஸ்வரர் திருமயம் புதுக்கோட்டை
சத்திய மூர்த்தி பெருமாள் திருமயம் புதுக்கோட்டை
அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) திருவரங்குளம் புதுக்கோட்டை
வியாக்ரபுரீஸ்வரர் திருவேங்கைவாசல் புதுக்கோட்டை
சுந்தரேஸ்வரர் துர்வாசபுரம் புதுக்கோட்டை

முத்து மாரியம்மன்

நார்த்தாமலை

புதுக்கோட்டை

கைலாசநாதர் (பிரசன்னநாயகி) நெடுங்குடி புதுக்கோட்டை
சண்முக நாதர் விராலிமலை புதுக்கோட்டை
பொய்யாளம்மன் ஆவுடையார் கோயில், ஒக்கூர் புதுக்கோட்டை
பார்வதீஸ்வரர் திருத்தெளிச்சேரி புதுச்சேரி
மணக்குள விநாயகர் புதுச்சேரி புதுச்சேரி
வேதபுரீசுவரர் புதுச்சேரி புதுச்சேரி

பிரத்யங்கிராதேவி

மொரட்டாண்டி

புதுச்சேரி

செங்கழுநீர் அம்மன்

வீராம்பட்டினம்

புதுச்சேரி

பிரளயகால வீரபத்திர சுவாமி கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு
வீரபத்ரசுவாமி விபூதிப்புரம் பெங்களூரு

மதுரகாளியம்மன்

சிறுவாச்சூர்

பெரம்பலூர்

ஏகாம்பரேஸ்வரர் செட்டிகுளம் பெரம்பலூர்
தண்டாயுதபாணி செட்டிகுளம் பெரம்பலூர்

அய்யனார் சுவாமி

கோச்சடை

மதுரை

மீனாட்சி சொக்கநாதர் கோச்சடை மதுரை
சுந்தரமகாலிங்க சுவாமி சதுரகிரி மதுரை
ஆதிசொக்கநாதர் சிம்மக்கல், மதுரை மதுரை
ஜெனகை நாராயணப் பெருமாள் சோழவந்தான் மதுரை

ஜெனகை மாரியம்மன்

சோழவந்தான்

மதுரை

திருமூலநாத சுவாமி (அகிலாண்டேஸ்வரி) சோழவந்தான் மதுரை

சுப்பிரமணிய சுவாமி

திருப்பரங்குன்றம்

மதுரை

ராதா கிருஷ்ணர் திருப்பாலை மதுரை
திருமறைநாதர் திருவாதவூர் மதுரை
தென்திருவாலவாயர் தெற்கு மாசி வீதி, மதுரை மதுரை
நவநீத கிருஷ்ணர் (பிரசன்னவெங்கடேசர்) தெற்குமாசி வீதி மதுரை

தண்டாயுதபாணி

நேதாஜி ரோடு, மதுரை

மதுரை
சுப்பிரமணிய சுவாமி பழமுதிர்சோலை மதுரை
கூடலழகர் மதுரை மதுரை
வீரராகவப்பெருமாள் மதுரை மதுரை

மாரியம்மன்

வண்டியூர்

மதுரை

அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் விராதனூர் மதுரை
ஐயப்பன் விளாச்சேரி மதுரை
வேணுகோபால சுவாமி குராயூர்கள்ளிக்குடி மதுரை
சித்திர ரத வல்லபபெருமாள் குருவித்துறை மதுரை

வீர ஆஞ்சநேயர்

வண்டியூர்

மதுரை

நிமிஷாம்பாள்

கஞ்சாம்

மைசூரு

காசி விஸ்வநாதர் காசி வாரணாசி
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி தேவதானம் விருதுநகர்
மாயூரநாதர் சுவாமி பெத்தவநல்லூர், இராஜபாளையம் விருதுநகர்
அங்காள ஈசுவரி மாந்தோப்பு விருதுநகர்

நல்லதங்காள்

வத்திராயிருப்பு

விருதுநகர்

நம்பெருமாள் சோலைக்

கவுண்டன் பட்டி

விருதுநகர்
ஸ்ரீநிவாசப்பெருமாள் திருவண்ணாமலை விருதுநகர்
அகஸ்தீஸ்வரர் கிளியனூர் விழுப்புரம்
அபிராமேஸ்வரர் திருவாமத்தூர் விழுப்புரம்
நெற்குத்தி விநாயகர் தீவனூர் விழுப்புரம்
செல்வ விநாயகர் சேண்பாக்கம் வேலூர்
வில்வநாதேஸ்வரர் திருவல்லம் வேலூர்
மார்க்கபந்தீசுவரர் விரிஞ்சிபுரம் வேலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *