Tag Archives: வேலிமலை

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை, நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91-4651 – 250706, 233270 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

குமார சுவாமி

உற்சவர்

மணவாளகுமரன்

தலவிருட்சம்

வேங்கை மரம்

தீர்த்தம்

தெப்பக்குளம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

வேள்விமலை

ஊர்

வேலிமலை, குமார கோயில்

மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி கேரள மாநிலத்தோடு இருந்துவிட்டது. மேலும் நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது இருக்கிறது. முருகப்பெருமான் இங்குதான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மிகவும் பழமையான கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக் கருதப்படுகிறது. கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.