Tag Archives: தேவதானம்

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம்

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம், விருதுநகர் மாவட்டம்.

+91 98435 46648

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி
உற்சவர் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி
அம்மன் தவமிருந்த நாயகி
தல விருட்சம் நாகலிங்க மரம்
தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம்
ஆகமம் சிவஆகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் தேவதானம்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தனான வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்தது. விக்கிரமசோழன், பாண்டிய மன்னன் மீது பலமுறைபோர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. எனவே வஞ்சகத்தால் அவனைக் கொல்ல முடிவெடுத்தான். அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி, நச்சு கலந்த ஆடையைப் பரிசாக கொடுத்து அனுப்பினான். அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவர். இறைவன் அருளால் சோழனின் சதித்திட்டத்தைப் பாண்டிய மன்னன் அறிந்தான். தனக்கு பரிசாக கொடுத்தனுப்பிய நச்சு ஆடையை, அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே போர்த்தி விட்டான். சேவகன் எரிந்து சாம்பலானான். நச்சு ஆடையை அணியவிடாமல் பாண்டியனைக் காப்பாற்றிய சிவனுக்கு, பாண்டியன் கோயில் எழுப்பினான். நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி என்று பெயர் சூட்டினான்.