Tag Archives: மலப்புறம்

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆலத்தியூர், மலப்புறம்

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆலத்தியூர்– 676 102. மலப்புறம். கேரளா.

காலை 5 மணி முதல் 10மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் ராமர், ஆஞ்சநேயர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆலத்தியூர்
மாவட்டம் மலப்புரம்
மாநிலம் கேரளா

கேரளமாநிம் ஆலத்தியூரில் அமைந்துள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். கோயிலின் கருவறையில் இராமபிரான் சீதையில்லாமல் தனியாக, தோற்றத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கிறார்.

இராமன், சீதையைத் தேடிப்போகும் உத்தம பக்தனான அனுமனுக்கு சீதையின் அடையாளங்களை சொல்லிக்கொடுக்கும்போது, அதைக் கேட்கும் தோற்றத்தில் தான் அனுமன் உள்ளார்.

கருவறையின் பக்கத்தில் அமைந்துள்ள கோயிலில் அனுமான் வீற்றிருக்கிறார். இராமபிரான் சொல்லும் ரகசியத்தை தலை சாய்த்து கேட்கும் ஆஞ்சநேயருக்கு முப்பத்தி முக்கோடி தேவர்களும் தங்களது சக்தியைக் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.