Tag Archives: சென்னிவாக்கம்

அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சென்னிவாக்கம்

அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சென்னிவாக்கம், ஜெகநாதபுரம் போஸ்ட், பொன்னேரி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 44 – 2558 6903, 90032 64268, 94447 32174

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 – 10 மணி, மாலை 6 – இரவு 8 மணி. மதிய வேளையில் கோயில் அருகிலுள்ள அர்ச்சகரை அழைத்துக்கொண்டு, சுவாமியை தரிக்கலாம். இத்தலத்திற்கு செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

மூலவர் கல்யாணவீரபத்திரர்
அம்மன் மரகத பத்ராம்பிகை
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சென்னிவாக்கம்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில வியாபாரிகள், நவரத்தினக்கல் வியாபாரம் செய்வதற்காக தென்திசை நோக்கி வந்தனர். அவர்களில் வயதான மூதாட்டி ஒருத்தியும் வந்தாள். அம்பாள் பக்தையான அவள், தன்னுடன் ஒரு அம்பாள் சிலையையும் எடுத்து வந்தாள். தான் தங்குமிடங்களில் அம்பாளை வழிபட்டு, மீண்டும் பயணத்தை தொடரும்போது சிலையை எடுத்துச் செல்வது அவளது வழக்கம். வியாபாரிகள் ஒருநாள் இத்தலத்தில் தங்கினர். வழக்கம் போல் அம்பாளுக்கு பூஜை செய்து வணங்கிய மூதாட்டி, சிலையை எடுக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. உடன் இருந்த வியாபாரிகளும் சிலையை எடுக்க முயன்று, முடியாமல் விட்டுவிட்டனர். காரணம் தெரியாத வியாபாரிகள், மறுநாள் கிளம்ப நினைத்து அன்றும் இத்தலத்திலேயே தங்கினர். அன்றிரவில் மூதாட்டியின் கனவில் தோன்றிய அம்பிகை, தான் இருக்கும் இடத்திற்கு அருகில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு வீரபத்திரர் இருப்பதாக உணர்த்தினாள். மூதாட்டி இதை வணிகர்களிடம் கூறினாள். அவர்கள் அவ்விடத்தில் தோண்டியபோது, வீரபத்திரர் சிலை இருந்ததைக் கண்டனர். பின்னர் அங்கேயே அவரைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். அம்பாள் குறிப்பால் உணர்த்தி கிடைக்கப்பெற்ற மூர்த்தி என்பதால் இவர், “கல்யாண வீரபத்திரர்என்று பெயர் பெற்றார். இத்தலத்து வீரபத்திரர் மண்ணிலிருந்து தாமாக கிடைத்தவர் என்பதால், “தான்தோன்றி வீரபத்திரர்என்றும், “மண்ணில் கிடைத்த தங்கம்என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.