Tag Archives: துவாரகை

அருள்மிகு துவராகாநாதர் திருக்கோயில், துவாரகை

அருள்மிகு துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் ஜகத் மந்திர்“) திருக்கோயில், துவாரகை, ஜாம்நகர் – 361 335 குஜராத் மாநிலம்.

+91-2892 – 234 080 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் துவராகாநாதர்(துவாரகீஷ்)
தாயார் பாமா, ருக்மணி, ராதா
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சுதாமபுரி
ஊர் துவாரகை
மாவட்டம் அகமதாபாத்
மாநிலம் குஜராத்

ஜராசந்தன் கம்சனின் மைத்துனன். இவனது தங்கையைத்தான் கம்சன் திருமணம் செய்திருந்தான். கண்ணன் கம்சனைக் கொன்றதால், தங்கை பூவிழந்ததைப் பொறுக்காத ஜராசந்தன் கண்ணனைக் கொல்ல முயன்றான். ஆனால், அவன் படையை தோற்கடித்து அனைவரையும் கொன்ற கண்ணன், பிற்காலத்தில் நடக்கவிருந்த மகாபாரத யுத்தத்தைக் கணக்கில் கொண்டு ஜராசந்தனை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான். உயிர்தப்பிய ஜராசந்தன் கண்ணனைப் பழிவாங்க காத்திருந்தான். இவர்களைத் தவிர காலயவணன் என்ற மன்னனும் கண்ணனைக் கொல்ல திட்டம் வைத்திருந்தான். தன்னால் யாதவ குலத்துக்குத் தீங்கு வரக் கூடாது என்று எண்ணிய கண்ணன், தன் குலத்தாருடன் மதுராவில் இருந்து இடம் பெயர்ந்து, சவுராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிக்கு வந்து விட்டார். அங்கே அவர்களுக்கு விஸ்வகர்மா பாதுகாப்பான ஒரு நகரத்தை அமைத்துக் கொடுத்தார். கலையழகு மிக்க இந்நகரை கடலுக்கு நடுவே அமைக்க சமுத்திரராஜன் இடம் கொடுத்து உதவினான். 12 யோசனை பரப்புள்ள இடம் தரப்பட்டது. துவாரகையைத் தங்கத்தாலேயே இழைத்தார் விஸ்வகர்மா. இதனால் இது தங்க நகரம்எனப்பட்டது. கண்ணன் தனது அவதாரம் முடிந்து மரணமடையும் வேளையில், வேடன் ஒருவன் அவன் மீது அம்பெய்தான். அப்போது துவாரகை கடலில் மூழ்கி விட்டது. பின்னர், இப்போதுள்ள, புதிய துவாரகை அரபிக்கடலில் கட்ச் வளைகுடா பகுதியில் எழுந்தது.