Tag Archives: அத்தாணி

அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில், அத்தாணி

அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில், அத்தாணி, ஈரோடு மாவட்டம்.

+91-98652 86606

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சந்திரசேகரர்
அம்மன் ஆனந்தவல்லி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் அத்தாணி
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

அத்தாணி ஒரு காலத்தில் அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. சடையப்பர் என்ற விவசாயி மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

ஒருநாள் புலி ஒன்று பசுவை கடுமையாக தாக்கியது. சடையப்பர் புலியுடன் சண்டை போட்டு விரட்டினார். இருப்பினும் காயமடைந்தார். வெகுநேரமாகியும் சடையப்பரும், பசுவும் வராததால் இவர்களைத் தேடி ஊரார் காட்டுக்கு புறப்பட்டனர். பசு அவரை சுமந்து கொண்டு, இப்போது கோயில் இருக்கும் இடத்தின் அருகில் கொண்டு வந்து சேர்த்தது. சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இது கண்ட பசுவும் இறந்தது. ஊரார் மனம் வருந்தினர்.