Tag Archives: திருக்குரக்கா

அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா

அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா, மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 258 785 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குந்தளேஸ்வரர்
அம்மன் குந்தளாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கணபதி நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கரக்காவல்
ஊர் திருக்குரக்கா
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர்

சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய இராமர், இலிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் இலிங்கம் எடுத்து வரச் சென்றார். இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் இலிங்கம் சமைக்கவே, இராமர் அந்த இலிங்கத்திற்குப் பூஜை செய்தார். அதன்பின்பு இலிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், இராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் இலிங்கத்தைத் தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை. சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் குண்டலகேஸ்வரர்என்றும் பெயர் பெற்றார்.

ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், இராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை, “சிவஆஞ்சநேயர்என்றும், “சிவபக்த ஆஞ்சநேயர்என்றும் அழைக்கிறார்கள். இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.