Tag Archives: திருப்பழனம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 4362 326 668 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆபத்சகாயர்
அம்மன் பெரிய நாயகி
தல விருட்சம் கதலி(வாழை), வில்வம்
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பழனம்
ஊர் திருப்பழனம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் திருப்பழனம்என்று பெயர். நந்தியெம்பெருமானுக்கு ஈசன் மணமுடிக்க விரும்பினார் . சிலாத முனிவருடைய மகனான நந்திக்கு திருமழபாடியில் திருமணம் நடைபெற்றது. நந்தியும் ஈசனுடைய பிள்ளை போன்றவராதலால் அவரை ஏழூர் ஊர்வலமாக அழைத்துவர ஈசன் விரும்பினார். அவ்வூர்வலம் திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் வழியாக மீண்டும் திருவையாற்றை வந்தடையும்.

திருமண நாளன்று ஈசன் கண்ணாடிப்பல்லக்கில் எழுந்தருளியிருக்க, நந்தி அவருடன் மனைவி ஸ்வயம்ப்ரகாசையுடன் இருக்க, ஏழூர் உற்சவமாகச் செல்வதுதான் சப்தஸ்தான ஐதீகமாகும் . இதில் மற்றுமொரு சிறப்பு என்னவெனில் ஏழூருக்கும் பல்லக்கு தோள்களிலேயே சுமந்து செல்லப்படுகிறது. வாகனம் பயன்படுத்தப்படுவது இல்லை. சித்திராபௌர்ணமியன்று இவ்விழா நடைபெருகிறது.