Tag Archives: பெருமகளூர்

சோமநாதர் திருக்கோயில், பெருமகளூர்

அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், பெருமகளூர், பேராவூரணி தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 90479 58135

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமநாதமுடையார்
அம்மன் சுந்தராம்பிகை, குந்தளாம்பிகை
தல விருட்சம் செந்தாமரைக் கொடி
தீர்த்தம் லெட்சுமி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சதூர்வேதி மங்கலம், பெருமூள்ளுர், பேரூர்
ஊர் பெருமகளூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் பெருமகளூர் கிராமத்தில் உள்ள பொதுக் குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது, குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது, தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழமன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித்தழுவியபோது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து, வைரம், வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பாணத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.

தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி, புத்திரகாமேஷ்டி யாகம் தொடங்கும் முன், மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி, தக்க இடத்தை தேர்ந்தெடுக்குமாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை கண்டு சொல்லுமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார்.