Tag Archives: சோழன் பேட்டை

அருள்மிகு கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் திருக்கோயில், சோழன் பேட்டை

அருள்மிகு கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் திருக்கோயில், சோழன் பேட்டை கிராமம், மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.

+91 4364 223395, 98424 23395 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8.00 முதல் 12.00 – மாலை 4.30 முதல் 8.00 வரை சனிக்கிழமை காலை 7.00 முதல் 12.00 – மாலை 4.00 முதல் 8.00 வரை

மூலவர் ஸ்ரீவானமுட்டிப் பெருமாள் (ஸ்ரீனிவாச பெருமாள்)
தாயார் ஸ்ரீதயா லெட்சுமி
தீர்த்தம் விஸ்வரூபபுஷ்கரணி
புராணப் பெயர் கோடிஹத்தி
மாநிலம் தமிழ்நாடு

சோழநாட்டில் பிப்பலர் என்றொரு மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு திடீரென கடுமையான சரும நோய் ஏற்பட்டது. தாங்கமுடியாத சரும நோயினால் அவதிப்பட்ட பிப்பல மகரிஷி பெருமாளை நினைத்து, தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து தன்னை விடுவிக்கும்படி வேண்டினார். ஒருநாள் பிப்பல மகரிஷின் கனவில் தோன்றிய பெருமாள், அவரிடம்,”முன் ஜென்மத்தில் நீ அரசனாக இருந்தாய். அப்போது, ஒரு உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறாய். அதன் காரணமாக இந்த ஜென்மத்தில் சரும நோயால் பாதிக்கப் பட்டுள்ளாய்எனவும் அந்த பாவம் தீர, காவிரிக் கரையோரமாகவே உனது பயணத்தைத் தொடங்குஎனப் பெருமாள் கூறினார். மூவலூரில் குடிகொண்டுள்ள ஸ்ரீமார்க்கசகாயேசுவரர் பிப்பல மகரிஷிக்கு வழிகாட்டுவார் எனவும் கூறினார். அந்த வழிகாட்டுதலின் படி நடக்க மகரிஷியின் சரும நோய் தீரும் என அருளினார் பெருமாள்.