Tag Archives: வாழைப்பந்தல்

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல்

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.
***************************************************************************************************

காலை 6 மணி முதல் 10 மணி வரை  திறந்திருக்கும்.

மூலவர் பச்சையம்மன்
தல விருட்சம் வில்வ மரம், வேப்பமரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் வாழைப்பந்தல்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

பார்வதிதேவி, ஈசனின் இடப்பாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் வாழைப்பந்தல் அமைத்தாள். அங்கு மணலில் இலிங்கம் பிடித்து வழிபட எண்ணினாள். அதற்கு நீர் தேவை. உடனே தனது பிள்ளைகளான முருகனையும், கணேசனையும் அழைத்து நீர் கொண்டு வரச் சொல்கிறாள். இருவரும் புறப்பட்டனர். வெகு நேரமாகிவிட்டது. பிள்ளைகள் வரவில்லை. அன்னையே தனது கைப்பிரம்பினால் பூமியைத் தட்டி ஓர் நீரூற்றினை ஏற்படுத்துகிறாள். அந்நீரினைக் கொண்டு மணல் இலிங்கம் பிடித்து முடிக்கிறாள். அதன் பின்னரே கந்தனும், கணபதியும் ஆளுக்கொரு நதியோடு அன்னை முன் வந்து நின்றனர். அன்னை உண்டாக்கிய நதியோடு, மூன்று நதிகள் ஆயின. அம்மூன்று நதிகள் இங்கு கூடிடவே இவ்விடம் முக்கூட்டு என்று அழைக்கப்பட்டது. அன்னை சிவபூஜை செய்யும் வேளையில் அருகில் உள்ள கதலிவனத்தில்(வாழைத்தோப்பு) இருந்த அரக்கன் ஒருவன் இடையூறுகள் பல கொடுத்தான்!