Tag Archives: எட்டுக்குடி

அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி

அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி, நாகப்பட்டினம் மாவட்டம். +91- 4366-245 426 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

முருகன்

தல விருட்சம்

வன்னி மரம்

தீர்த்தம்

சரவணப்பொய்கை

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

எட்டுக்குடி

மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். “சரவணபவஎன்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த இவன், அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையை செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த பரந்த சோழ மன்னன், அச்சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான். இது போல இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக, அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான். அவன் வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான். அதை அவ்வூரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான். அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்நேரத்தில் வர அதை எட்டிப்பிடிஎன உத்தரவிட்டான். காவலர்கள் மயிலை பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. “எட்டிப்பிடிஎன்ற வார்த்தை காலப்போக்கில் எட்டிக்குடிஎன மாறி தற்போது எட்டுக்குடிஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது.