Tag Archives: முத்தனம் பாளையம்

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம்

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம் – 641 606 திருப்பூர் மாவட்டம்.

+91- 421-220 3926, 224 0412.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:அங்காளம்மன்

தல விருட்சம்: வேம்பு

பழமை:500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:முத்தனம் பாளையம்

மாவட்டம்: திருப்பூர்

மாநிலம்: தமிழ்நாடு

சுமார் 800 வருடங்களுக்கு முன் இப்போது கோயில் அமைந்துள்ள இடத்தில் புதர்கள் மண்டிக்கிடந்த காடாக இருந்தது. இந்த காட்டிற்கு அருகிலிருந்த கிராமத்தார்களின் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வரும். அவ்வாறு மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளில், அருகிலிருக்கும் மணியம்பாளையத்தை சேர்ந்த பசு ஒன்று, புற்று வடிவில் சுயம்புவாக எழுந்திருக்கும் கருநாக ரூபிணிக்குத் தானாக பால் சுரந்து கொடுத்து விட்டு வந்து விடும். இதனால் அது ஈன்ற கன்றுக்கு கூட பால் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பசுவின் சொந்தக்காரர் மாடு மேய்ப்பவனை கண்டிக்கிறார். அத்துடன் பசுவையும் கண்காணிக்கிறார். அப்போதுதான் பசுவானது சுயம்புவுக்குத் தானாக பால் சுரப்பதை நேரில் கண்டார்.