Tag Archives: திருவக்கரை

சந்திர மௌலீசுவரர் திருக்கோயில், திருவக்கரை

அருள்மிகு சந்திர மௌலீசுவரர் திருக்கோயில், திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்.

+91 – 413 2688949

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சந்திரமவுலீஸ்வரர், சந்திரசேகரர், பிறைசூடிய எம்பெருமான்
அம்மன் அமிர்தாம்பிகை, அமிர்தாம்பிகை, வடிவாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சூரியபுஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வக்ராபுரி
ஊர் திருவக்கரை
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர்

வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை, காளி சம்காரம் செய்யும்போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையைக் காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து. இடது பாதத்தில் ஸ்ரீசக்ர ராஜ இயந்திரத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

இராகு, கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால், வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம்.