Tag Archives: பார்த்திபனூர்

அருள்மிகு சங்கரனார் திருக்கோயில், பார்த்திபனூர்

அருள்மிகு சங்கரனார் திருக்கோயில், இராமேஸ்வரம் ரோடு, பார்த்திபனூர், இராமநாதபுரம் மாவட்டம்.

+91- 94420 47977, +91- 99767 11487

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்குச் செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

மூலவர்

சங்கரனார் (சொக்கநாதர்)

தாயார்

மீனாட்சி

தல விருட்சம்

மாவலிங்க மரம்

தீர்த்தம்

சங்கரன் குளம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

நல்லூர்

ஊர்

பார்த்திபனூர்

மாவட்டம்

இராமநாதபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

மகாபாரதப் போரின்போது பாண்டவ, கவுரவ படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வியாசர் அர்ஜுனனிடம், சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனன் சிவனை வேண்டித் தவமிருந்தான். அவனது தவத்தை கலைக்க முகாசுரனை அனுப்பினார் துரியோதனர். பன்றி வடிவில் வந்த அசுரனை, அர்ஜுனன் அம்பால் வீழ்த்தினான். அப்போது சிவன், வேடன் வடிவில் சென்று, அது தனக்குரியது என்றார். அர்ஜுனன் மறுத்தான். சிவன் தானே அதை வேட்டையாடியதாகச் சொல்லி சண்டைக்கு இழுத்தார். அவருடன் போரிட்ட அர்ஜுனன், அம்பு எய்தான். அது சிவனின் தலையைப் பதம் பார்த்தது. இரத்தம் வழிய நின்ற சிவன், அவனுக்கு சுயரூபம் காட்டினார். வருந்திய அர்ஜுனன், மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு, பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். அதன்பின், அவன் பல இடங்களில் சிவ வழிபாடு செய்தான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, இங்கு சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டு வழிபட்டான். பிற்காலத்தில் பக்தர் ஒருவரிடம் அசரீரியாக சிவன், இங்கு இலிங்கமாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தியபின், இக்கோயில் எழுப்பப்பட்டது.