Tag Archives: இரணியூர்

ஆட்கொண்டநாதர் திருக்கோயில், இரணியூர்

அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில், இரணியூர், சிவகங்கை மாவட்டம்.

+91- 4577 – 265 645, 98424 80309

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆட்கொண்டநாதர்
அம்மன் சிவபுரந்தேவி
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இரணியூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்காரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கினார்.

திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் ஆட்கொண்டநாதர்என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, “நரசிம்மேஸ்வரர்என்றும் பெயருண்டு.