Tag Archives: பெருவனம்

மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில், பெருவனம்

அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில், பெருவனம், திருச்சூர், கேரளா.

+91- 487 – 234 8109

காலை 5 மணி முதல்10.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் மகாதேவர், இரட்டையப்பன்
அம்மன் பார்வதி
தல விருட்சம் ஆல மரம்
தீர்த்தம் தொடுகுளம்
பழமை 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் பெருவனம்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா

பூரு மகரிஷி வனமாக இருந்த இப்பகுதியில் சிவனை நோக்கிக் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் பார்வதியுடன் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தந்து, இலிங்கம் ஒன்றை கொடுத்தார். அந்த இலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்குரிய தீர்த்தத்தை தனது கையாலேயே உருவாக்கினார் மகரிஷி. விரல்களால் மூன்று கோடு போட்டு ஒரு குளத்தை உருவாக்கினார். எனவே அது தொடுகுளம்எனப்பட்டது. இந்த குளத்தில் நீர் வற்றும் போது மகரிஷி போட்ட மூன்று கோடுகளை இப்போதும் காணலாம். ஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து சென்றார். திரும்ப வந்து இலிங்கத்தை எடுத்தபோது இலிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி இலிங்கத்தை பூஜித்து வந்தார். இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும். பூரு மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் பூரு வனம்என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் பெருவனம்ஆனது.