Category Archives: தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் – ஆலயங்கள்

தர்மபுரி மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

சிவசுப்ரமணிய சுவாமி

குமாரசாமி பேட்டை

சுயம்புலிங்கேஸ்வரர் அமானிமல்லாபுரம்
மல்லிகார்ஜூனேசுவரர் தகட்டூர்
மல்லிகார்ச்சுனர் தர்மபுரி
தீர்த்தகிரீசுவரர் தீர்த்தமலை
சென்னகேஸ்வர பெருமாள் கோவிலூர்
பேட்டைராய சுவாமி தேன்கனிக்கோட்டை

அருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில், தேன்கனிக்கோட்டை

அருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில், தேன்கனிக்கோட்டை, தர்மபுரி மாவட்டம்.

+91-4344 – 292 870 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பேட்டைராயசுவாமி

உற்சவர்

தேவபெருமாள்

தாயார்

சௌந்தர்யவல்லி

தல விருட்சம்

இலந்தை மரம்

தீர்த்தம்

சுவாமி புஷ்கரணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

டென்கனிக்கோட்டை

ஊர்

தென்கனிக்கோட்டை

மாவட்டம்

தர்மபுரி

மாநிலம்

தமிழ்நாடு

கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அந்த காலத்தில் அத்திரி வனம் என்று பெயர். அந்த காட்டில் கண்வர் (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) தவம் செய்ய வந்தார். தவம் செய்து கொண்டிருக்கும் போது தேவகண்டகவன் என்ற யக்ஷன் சாபம் ஏற்பட்டு புலித் தலை, மனித உடம்போடு அலைந்த கொண்டிருந்ததால் கண்வர் ரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் துன்பம் ஏற்பட்ட கண்வ ரிஷி திருவேங்கட மலையானை நினைத்து வழிபட்டு தன்னை காக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். திருவேங்கடமலையானும் இவன் புலித் தலையோடு இருந்ததால் வேட்டைக்கார ரூபத்தில் வந்து போரிட்டு டெங்கினி என்ற கதையால்(ஆயுதத்தால்) அவரை அடித்து சம்காரம் செய்து, முனிவரின் தவத்தை காப்பாற்றினார். முனிவரின் பிரார்த்தனையின் பேரில் பேட்டைராய சுவாமி என்ற பெயரில் பூதேவி ஸ்ரீதேவியோடு இங்கு எழுந்தருளியதாக வரலாறு கூறுகிறது.

விஷ்ணு கார்த்திகை அன்று சுவாமி புது வஸ்திரத்தை நெய்யால் துவைத்து தீபாராதனை காட்டி, கோபுரத்தின் உச்சியிலிருந்து கம்பால் தொங்க வைத்து கற்பூரத்தால் கொளுத்துவார்கள். இவ்வாறு செய்வதால் தீமைகள் அழிக்கப்படுகின்றன என்பது ஐதீகம். எல்லா ஜீயர்களும் ஆச்சார்யார்களும் மங்களாசாசனம் செய்த தலம். வானமாமலை தற்போது முன்பிருக்கும் பட்டம், திருமலை பெரிய ஜீயர், திருப்பெரும்புதூர் எம்பார் ஜீயர், வரத எத்திராஜ ஜீயர், காஞ்சி அழகிய மணவாள ஜீயர், தற்போது இருக்கும் ஆண்டவன் சுவாமி மேல்கோட்டை (கர்நாடகா) எதிகிரி எத்திராய ஜீயர் இவர்களால் மங்களாசாசனம் செய்யப் பட்டது. பழமை வாய்ந்த கோயில் இது. திருப்பதியில் உள்ளபடியே நின்று சேவை சாதிக்கும் மூல மூர்த்தியின் திருக்கோலம் மிக அழகாக உள்ளது.