Tag Archives: புன்னைநல்லூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர் – 613 501 தஞ்சாவூர் மாவட்டம்.
*************************************************************************************************

+91- 4362- 267740 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 – இரவு 9 மணி. ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 3 – இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்(முத்துமாரி), துர்க்கை

தல விருட்சம்: – வேம்புமரம்

தீர்த்தம்: – வெல்லக் குளம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – புன்னைவனம்

ஊர்: – புன்னைநல்லூர்

மாவட்டம்: – தஞ்சாவூர்

மாநிலம்: – தமிழ்நாடு

கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டு வந்தான்.

தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வணங்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.

புன்னைநல்லூர்-ருத்திர துர்க்கை

புன்னைநல்லூர் ருத்திர துர்க்கை, இராசராசேசுவரி, மாரியம்மன், புற்று
****************************************************************************************