Tag Archives: பரக்கலக்கோட்டை

பொதுஆவுடையார் கோவில், பரக்கலக்கோட்டை

அருள்மிகு பொதுஆவுடையார் கோவில், பரக்கலக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4373 – 283 295, 248 781

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்)
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பரக்கலக்கோட்டை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

வான் கோபர், மகா கோபர் என்ற இரு முனிவர்களுக்கு, “இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என்று சந்தேகம் வந்தது. தங்களுக்குத் தீர்ப்பு சொல்லும்படி இருவரும் சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவர் இத்தலத்தில் காத்திருக்கும்படி சொல்லி, தான் அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அதன்படி இத்தலம் வந்த இரு முனிவர்களும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். நடராஜர், ஒரு கார்த்திகை மாத, திங்கட்கிழமையன்று சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு இங்கு வந்து, ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று இருவருக்கும் பொதுவாக, “இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்புஎன்று பொதுவாக தீர்ப்புக் கூறிவிட்டு, பின்பு வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். தீர்ப்பு சொல்வற்காக வந்த சிவன் என்பதால் இவர் பொது ஆவுடையார்என்றும், “மத்தியபுரீஸ்வரர்என்றும் பெயர் பெற்றார்.

ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (இலிங்கம்) வழிபடப்பெறும் சிவன், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார்.