Tag Archives: கோலியனூர்

வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம் மாவட்டம்.

+91- 4146- 231 159, +91-94432 93061

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வாலீஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கோலியனூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களைத் துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராமி, மகேசுவரி, கவுமாரி, வைணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். “சப்தகன்னியர்எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.