Tag Archives: பண்ணாரி

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி – 638 451, சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்.
*****************************************************************

+91-4295-243366, 243442 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

தல விருட்சம்: – வேங்கைமரம்

தீர்த்தம்: – தெப்பக்கிணறு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மண்ணாரி

ஊர்: – பண்ணாரி

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இச்சுற்று வட்டார மக்கள் ஆடு மாடுகளை மேய்க்க இந்த வனப்பகுதிக்கு வருவது வழக்கம்.

ஒருநாள் காராம் பசு ஒன்று தினந்தோறும் பட்டியை (மாடுகள் கூட்டம்) விட்டுவிட்டு தனியே சென்று வருவதை மேய்க்கிறவன் கவனித்து விட்டான். பிறகு அப்பசுவை பின்தொடர்ந்து சென்று பார்க்கையில் அப்பசு தன் மடியிலூறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் அடர்ந்த புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாக பொழிவதை பார்த்தான்.

இதை ஊர் மக்களிடம் தெரிவிக்க, அவர்கள் வந்து அந்த குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்கையில் அடர்ந்த புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதனருகில் சுயம்புலிங்கத் திருவுருவமும் வேங்கை மரத்தடியில் இருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அங்கிருந்தவருக்கு அருள் வந்து, “கேரளாவிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இவ்விடத்தில் நான் தங்கி விட்டேன். என்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் என போற்றி வழிபடுங்கள்என்று அருள் வாக்கு கூறினார். இதையடுத்து பண்ணாரி மாரியம்மனுக்குக் குடில் அமைத்து மக்கள் வழிபட்டனர்.