Category Archives: பைரவர்

வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) கோயில், திருப்புத்தூர்

அருள்மிகு வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) கோயில், திருப்புத்தூர், சிவகங்கை மாவட்டம்.

+94420 47593 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 முதல் 12.30வரை, மாலை 3.30 முதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும்.

 

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அஷ்ட பைரவர் தலங்கள் உள்ளன. பொதுவாக பைரவர், ஆடையில்லாமல், நாய் வாகனத்துடன் காட்சி தருவார். ஆனால், இவர் வெண்ணிற பட்டாடை அணிந்து, நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்.

முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி, கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார். புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் புற்றீஸ்வரர்எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது. புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், “புத்தூர்என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் திருஎன்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, “திருப்புத்தூர்ஆனது. அதுவே திருப்பத்தூர். பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி, சிவகங்கை மாவட்டம்.

+91-4577- 264 237

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வளரொளிநாதர்(வைரவன்)
அம்மன் வடிவுடையம்பாள்
தல விருட்சம் ஏர், அளிஞ்சி
தீர்த்தம் வைரவர் தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வடுகநாதபுரம்
ஊர் வைரவன்பட்டி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார். ஒருமுறை பார்வதிதேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார். பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார். பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து கூறினாள். எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.

இங்கு கருவறை கோஷ்டத்தில் இராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி இராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.