Tag Archives: நல்லாத்தூர்

வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நல்லாத்தூர்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நல்லாத்தூர், கடலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வரதராஜப்பெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி, கஜலட்சுமி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

நல்லாத்தூர்

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

காஞ்சியில் பெரிய ஆலயம் கொண்டு, வரம் தருவதே எமது வாடிக்கை; அது தவிர வேறொன்றும் அறியேன்என்று சொல்லி அமர்ந்தார் வரதாஜப் பெருமான். தான் வருவதற்கு முன்னரே தனது அம்ச மூர்த்தியைப் பல்வேறு தலங்களில் நிலைநிறுத்திக் கொள்ளும் எண்ணமும் அவருக்கு இருந்தது. அவற்றில் ஒன்றாக நல்லாத்தூரிலும் ஆட்சி கொண்டார். இராவணனை வீழ்த்திய பின் பாரத தேசத்தின் அனைத்து மக்களையும் காண்பதற்காக, சிறு கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை சீதாப்பிராட்டியோடு இராமர் திருவலம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தார். மக்கள் அனைவரும் இராமநாமம் சொல்லி அவரை வரவேற்றனர். “தங்களின் திருப்பாதங்களைப் பதித்து விட்டு செல்லுங்கள். அனுதினமும் அதைப் பூஜித்து ஆனந்தமடைவோம்என அன்புடன் கேட்டுக் கொண்டனர். இராமரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றார்.

இங்குள்ள ஆதிலட்சுமி நாராயண பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அர்த்தமண்டபத்தில் திரிபங்கி இராமரும், அவருக்கு அருகே இடது கையில் இராமரின் சூரியவம்சக் கொடியை ஏந்தியும், இருக்கிறார். வலது கையால் வாய் மூடிப் பணிவாக இருக்கிறார் விநய ஆஞ்சநேயர். அருகில் திருமங்கை ஆழ்வாரும், வேதாந்த தேசிகரும் சேவை சாதிக்கின்றனர். மேலும் இங்கு பெருந்தேவி தாயாரும், கஜலட்சுமியும் அருள்பாலிக்கின்றனர். பெருமாள் சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதி உள்ளது.

பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர்

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர், கடலூர் மாவட்டம்.

+91- 413 – 269 9422, 94427 86351

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர்
அம்மன் திரிபுர சுந்தரி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நல்லாத்தூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

திருநாவுக்கரசர் பாடிய வைப்புத்தலம்.

பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலகணி வழியாகப் பார்க்கின்ற சிவலிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் தீக்கதிர்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.