Tag Archives: புதுப்பாளையம்

அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம்

அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம், கடலூர் மாவட்டம்.

+91-4142- 295115, 94432 03257 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இராஜகோபாலசுவாமி

தாயார்

செங்கமலவல்லி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

புதுப்பாளையம்

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

இத்தலத்திற்கு ஒரு முறை வந்து தரிசனம் செய்தாலோ, அல்லது ஓரிரவு தங்கினாலோ ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என, புராணங்கள் கூறுகிறது. ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், வைராக்கியம் என ஐந்து கல்யாண குணங்களுடன் இத்தல பெருமாள் அருள்பாலிக்கிறார். எனவேதான் இவரை தரிசித்த மாத்திரத்தில் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி தருகிறார். நினைத்த காரியத்தை உடனே முடித்து தரும் இந்த பெருமாள் கடலூர் மாவட்டத்தின் தலைவனாக விளங்குகிறார். இங்குள்ள அனுமன் அவருக்கே உரிய சிறப்பாக இராமரின் தூதுவனாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் தினம் ஒரு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவகிந்திபுரம் பெருமாளின் தம்பியாக இவரை வணங்குகிறார்கள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு பெற்றது.

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம்

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம், அந்தியூர், ஈரோடு மாவட்டம்.

+91 96773- 65525 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குருநாதசுவாமி
அம்மன் காமாட்சி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் புதுப்பாளையம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி, மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர். இந்த கோயில் பூசாரி வீட்டுப் பெண்ணை, ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்துப் பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூசாரி கூறினார். உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து, “நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள்என்று கூறினார். பூசாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது யாரும் இல்லை. கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தினர். கற்களுடன் சென்றவர்கள் பல ஊர் கடந்து பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கினர். தங்களையே பாதுகாக்க இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, தங்களுடைய கூடையில் மூன்று கல் சிலைகள் இருந்ததைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அவற்றைத் தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்தனர். அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்தனர். பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று மூன்று கற்களையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார். காலப்போக்கில் மூன்று கற்சிலைகளுக்கும் பதிலாக, மூன்று உருவங்களை அமைத்து வழிபட முடிவு செய்தனர். அதன்படி முதல் கல்லைக் குலதெய்வமாக்கி காமாட்சி அம்மனாகவும், இண்டாவது கல்லை பெருமாளாகவும், மூன்றாவது கல்லை அப்பன் (சிவன்), மகன் (முருகன்) ஆகிய இருவரையும் இணைத்த நிலையில் குருநாதசுவாமி என்றும் பெயரிட்டனர். குரு என்றால் ஈஸ்வரன், நாதன் என்றால் முருகன். தெலுங்கு பக்தர்கள் இவரை பாலகுருநாதசுவாமி என்றும், உக்கிரகுருநாதர் என்றும் வணங்கி வருகின்றனர்.