Tag Archives: சக்குளத்துக்காவு

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சக்குளத்துக்காவு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் சக்குளத்துக்காவு
மாவட்டம் கோட்டயம்
மாநிலம் கேரளா

தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன் ஒருவன் தன் மனைவியுடன் காட்டிற்கு விறகு வெட்ட வந்த போது, ஒரு பாம்பு சீறி வந்தது. பயந்து போன வேடன், அதை தன் கோடரியால் வெட்ட முயன்ற போது, அது தப்பி ஓடியது. கொல்லாமல் விட்டதால், பாம்பு தன்னை பழிவாங்கி விடும் என பயந்த வேடன் அதைக் கொல்லும் முடிவுடன் விரட்டினான்.

ஒரு புற்றை நோக்கி ஓடிய பாம்பு, அதன் மீது ஏறி புற்றில் இருந்த துளைக்குள் செல்ல முயன்ற போது, வேடன் அதை வெட்டினான். ஆனால், பாம்பு வெட்டுப்படவே இல்லை. மாறாக சீறிக்கொண்டு படமெடுத்தது. சற்று நேரத்தில் புற்றிலிருந்து ஒரு தண்ணீர் ஊற்று கிளம்பியது. பாம்பு மறைந்து விட்டது.