Tag Archives: பரமேஸ்வர விண்ணகரம்

அருள்மிகு வைகுண்டப் பெருமாள் சுவாமி திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம்

அருள்மிகு வைகுண்டப் பெருமாள் சுவாமி திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2723 5273 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரமபதநாதர்(வைகுண்டப் பெருமாள்)
தாயார் வைகுந்தவல்லி
தீர்த்தம் ஆயிரம் தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பரமேஸ்வர விண்ணகரம்
ஊர் பரமேஸ்வர விண்ணகரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

விதர்ப்ப தேசம் எனும் இப்பகுதியை விரோச மன்னன் ஆட்சி செய்து வந்தான். இம்மன்னன் முற்பிறவியில் பெற்ற சாபத்தின் பலனால் புத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டு குழந்தையின்றி இருந்தான். சிவனின் தீவிர பக்தனான மன்னன், காஞ்சிபுரத்தில் குடிகொண்டிருக்கும் கைலாசநாதரை எண்ணி யாகம் செய்து அவரை வழிபட்டான். மன்னனுக்கு அருள் செய்த சிவன், மகாவிஷ்ணுவின் துவார பாலகர்களாக இருந்த பல்லவன், வில்லவன் ஆகிய இருவரையும் மகனாக பிறக்கும்படி செய்தார். விஷ்ணுவை காக்கும் பணியில் இருந்த இவர்கள் இளவரசர்களாகப் பிறந்துவிட்டாலும், அவர்மீது கொண்டிருந்த பக்தி மட்டும் குறையாமல் இருந்தனர். நாட்டு மக்களின் நன்மைக்காக விரதங்களைக் கடைப்பிடித்த இவ்விருவரும் விஷ்ணுவை வேண்டி இத்தலத்தில் ஒரு யாகம் செய்தனர். இவர்களது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஸ்ரீவைகுண்டநாதனாக காட்சி தந்தார்.