Tag Archives: திருவிஜயமங்கை

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 294 1912, 94435 86453, 93443 30834 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

தற்பொழுது ஆலயம் அதிகாலை முதல் இரவு வரை பக்ததர்கள் வசதிக்காக திறந்து விடப்படும் அலை பேசி எண் 9843606985,சு.செந்தமிழ்செல்வன் விஜயமங்கை

மூலவர் விஜயநாதேஸ்வரர் (விஜயநாதர்)
அம்மன் மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை)
தீர்த்தம் அர்ஜுன தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவிசயமங்கை
ஊர் திருவிஜயமங்கை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

மகாபாரத போரின்போது பாண்டவர், கவுரவர் படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். இவ்வேளையில், வேதவியாசர் அர்ஜுனராகிய விஜயனிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி விஜயன் சிவனை வேண்டித் தவமிருந்தான். இதையறிந்த, துரியோதனர் முகாசுரனை அனுப்பி தவத்தை கலைக்க முயன்றார். பன்றி வடிவில் வந்த அசுரனை, விஜயன் வீழ்த்தினான். அங்கு வந்த ஒரு வேடன், தானே பன்றியை வீழ்த்தியாகச் சொன்னார். இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அவ்வேளையில், சுயரூபம் காட்டிய சிவன், பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், “ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு விஜயன் தகுதிபெற்றவன்தானா?” என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், “விஜயன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்என்றார். விஜயனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். விஜயன், தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே, இங்கு எழுந்தருளிய சிவன் விஜயநாதர்என்று பெயர் பெற்றார். தலத்திற்கும் திருவிஜயமங்கைஎன்ற பெயர் ஏற்பட்டது.

சோழர்கால முறைப்படி கட்டப்பட்ட கோயில். இங்கு கருவறைக் கோபுரம் பெரியதாகவும், ராஜகோபுரம் சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும், பின் இரண்டு கைகளில் ஒரு கையில் அட்சரமாலையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது.