Tag Archives: குமாரவயலூர்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி மாவட்டம்.

+91 431 2607 344, 98949 84960 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மதியம் 1 மணி, மாலை 3.30 இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்பிரமணிய சுவாமி, ஆதிநாதர் (அக்னீஸ்வரர்)

அம்மன்

வள்ளிதேவசேனா , ஆதிநாயகி (பூர்வ சித்தி நாயகி)

தல விருட்சம்

வன்னிமரம்

தீர்த்தம்

சக்திதீர்த்தம்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

ஆதிவயலூர்

ஊர்

குமாரவயலூர்

மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வேட்டையாட வந்த சோழ மன்னன் ஒருவர் தண்ணீர் தாகம் எடுத்து நீருக்கு அலைந்து, இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு வரும் போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பு ஒன்றைக் கண்டு, அதனை ஒடித்துத் தாகம் தீர்க்க எண்ணி கரும்பை ஒடித்த போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அவ்விடத்தை தோண்டிப்பார்த்த போது சிவலிங்கம் இருந்ததாகவும் பின்னர் கோயில் எழுப்பியதாகவும் கர்ணபரம்பரை செய்தி கூறுகின்றது.

திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் முத்தைத் திருபாடியபின்பு வயலூருக்கு வாஎன்று முருகன் செல்ல அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதிதான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று செல்லப்படுகிறது. இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும் அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய பேரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கிருபானந்த வாரியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக உலகப் புகழ் பெற்ற கோயிலாக இன்று இக்கோயில் திகழ்கிறது.