Tag Archives: வீரபாண்டி

கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், வீரபாண்டி

அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், வீரபாண்டி, தேனி மாவட்டம்.

+91-4546-246 242

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கண்ணீஸ்வரமுடையார்
அம்மன் அறம்வளர்த்த நாயகி
தீர்த்தம் முல்லையாறு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் வீரபாண்டி
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

பாண்டிய நாட்டை வீரபாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். பார்வையோடு இருந்த அவனுக்கு முன்வினைப் பயனால் பார்வை போனது. அவன் பட்ட மனவருத்தத்துக்கு அளவே இல்லை. கஷ்டம் வரும் போது கடவுளை நினைக்காதவர் உலகில் இல்லை. வீரபாண்டியனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவன் சிவபெருமானை உணர்ச்சிப் பெருக்குடன் வணங்கினான். அவரது அறிவுரைப்படி முல்லையாற்றங்கரையிலுள்ள கவுமாரியை வணங்கச் சென்றான். கருணைத்தாயான அவள், அவனுக்கு ஒரு கண் பார்வையைக் கொடுத்தாள். மறுகண் ஒளி பெற, தான் வணங்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அறிவுறுத்தினாள். வீரபாண்டியனும் அவ்வாறே செய்தான். சிவன் அவனிடம் தனக்கொரு கோயிலை எழுப்பும்படி கூறினார். அவ்வாறு எழுந்ததே கண்ணீஸ்வரமுடையார் கோயில். பின்னர் வீரபாண்டியனின் மற்றொரு கண்ணும் ஒளி பெற்றது.

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி – 625 534 தேனி மாவட்டம்.
*******************************************************************************************
+91-4546-246242 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கவுமாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – வீரபாண்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வைகை வனத்தில் அரக்கன் ஒருவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தான்.

அந்த அசுரனை அழிப்பதற்காக பராசக்தி இந்த வனத்திற்கு வந்து கண்ணீசுவரர் என்ற திருநாமத்துடன் ஒரு லிங்கத்தைப் பூசித்து தவம் இருந்தாள்.

அப்போது அசுரன் அன்னை பார்வதியை கடத்திச் செல்ல முயன்றான். இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி அருகம்புல்லை எடுத்து அரக்கன் மீது வீச, அரக்கன் இரு துண்டுகளாகப் பிளந்து இறந்தான். இதனால் மகிழ்ந்த தேவர்கள் பார்வதியைக் கன்னித்தெய்வமாக்கி கவுமாரிஎனத் திருநாமம் சூட்டி வழிபட்டார்கள்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் வீற்றிருக்கும் கவுமாரியம்மன் கன்னித்தெய்வமாக வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தந்து ஆட்சிசெய்து வருகிறாள்.

கவுமாரியின் கருணை:

அன்னை பார்வதி வைகை வனத்தில் தவம் செய்த அதே காலத்தில், மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னனுக்கு ஊழ்வினையால் பார்வை பறி போனது. மன்னனும் இறைவனை மனமுருகி வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவன்,”வைகைக்கரை ஓரத்தில் அன்னை பார்வதி கவுமாரி என்ற திருநாமத்துடன் தவம் இருக்கிறாள். அவளை வழிபட்டால், உனது விழிக்கு ஒளி கிடைக்கும்என்று கூறி மறைந்தார்.