Tag Archives: மானந்தகுடி

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தகுடி

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தகுடி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 239389

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஏகாம்பரேஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் காமாட்சி
தீர்த்தம் அனுமன் தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் மானந்தகுடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

கார்த்தவீரியன் எனும் பக்தன் ஒருவன் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்து விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் அனுமன் ஆனந்த குடிஎன்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மானந்தகுடிஎன்று மருவியது.