Tag Archives: மணலி

அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில், மணலி

அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில், மணலி, வட சென்னை.

காலை 6 மணி முதல் 10.30 மணி வரையிலும்; மாலை 5.30 முதல் 8.30 வரை திறந்திருக்கும்.

திரு என்றால் செல்வம் என்று பொருள். தங்களது பெயரிலேயே திருவைக் கொண்டுள்ள இறைவனும், இறைவியும்; தங்களை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் திருவுக்குக் குறைவராமல் பார்த்துக்கொள்ளும் தலம், சென்னை மணலியில் அமைந்துள்ளது.

பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.