Tag Archives: திருப்புவனம்

அருள்மிகு பூவணநாதர்(புஷ்பவனேஸ்வரர்) திருக்கோயில், திருப்புவனம்

அருள்மிகு பூவணநாதர்(புஷ்பவனேஸ்வரர்) திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்.

+91 4575 265 082, 265 084, 94435 01761 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூவணநாதர், புஷ்பவனேஸ்வரர்
அம்மன் சௌந்தரநாயகி, மின்னனையாள்
தல விருட்சம் பலா
தீர்த்தம் வைகை, மணிகர்ணிகை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பூவணம்
ஊர் திருப்புவனம்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்து வந்தார். தனது கலை ஞானத்தால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு அமுது படைத்தே காலம் கழித்தாள். சிவ பக்தையான அவளுக்கு அவ்வூரில் உள்ள பூவணநாதரை சொக்கத் தங்கத்தில் வடிக்க ஆசை இருந்தது. இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் எனக் கூறினார். பொன்னனையளும் அன்று இரவு செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை நெருப்பிலிட அவை பொன்னாக மாறின. அந்த பொன்னைக் கொண்டு பூவணநாதரை உருவாக்கினாள். அப்போது பூவணநாதர் திருமேனி அழகில் சொக்கி, அவர் கன்னத்தை கிள்ளி பொன்னனையாள் முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது.

கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம், தஞ்சாவூர்

அருள்மிகு கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 2460760.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கம்பகரேசுவரர், நடுக்கம் தீர்த்த நாயகன்
அம்மன் தர்மசம்பர்த்தினி, அறம் வளர்த்த நாயகி
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் சரபதீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புவனேசுரம்
ஊர் திருப்புவனம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

வரகுணபாண்டியன் என்ற மன்னன் போருக்குச் செல்கிறான். அவனின் குதிரை வேகமாகச் செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர, குதிரையின் வேகத்தை அடக்குவதற்குள் குதிரை காலில் விழுந்து விதிப்பயனால் அந்த அந்தணர் உயிர் விடுகிறார். பிறகு அந்த அந்தணரின் ஆவியானது வரகுணபாண்டியனை பிடிக்கிறது.

அதாவது பிரம்மகத்தி தோசம் பிடிக்கிறது. அது நீங்க, திருவிடைமருதூர் செல்கிறார். அங்கு சென்று வழிபட அந்த பிரம்மகத்தி தோசமானது கிழக்கு வாயிலில் ஒதுங்குகிறது. அதிலிருந்து விடுபட்ட வரகுணபாண்டியன் தனது தோசம் நீங்கியவுடன் திருபுவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த ஆவி வந்து பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்த பயத்தினால் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த நடுக்கத்தை கம்பகரேசுவரர் போக்குகிறார்.