Tag Archives: ஐவர் மலை

அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர் மலை

அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர் மலை, பழநி, திண்டுக்கல் மாவட்டம்.

+91- 4545 – 260417 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திரவுபதி(பாஞ்சாலி)
தல விருட்சம் வன்னி, வேம்பு
தீர்த்தம் சூரிய புஷ்கரிணி, சந்திரபுஷ்கரிணி
முருகனுக்கு தனியாக பால்சுனை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் ஐவர்மலை
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

பஞ்சபாண்டவர்கள், தங்களின் வன வாசத்தின்போது பாஞ்சாலியுடன் இந்த ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுகிறார்கள். இதனால்தான் இந்த மலை ஐவர் மலை என அழைக்கப்படுகிறது. “ஐவர் மலை இல்லை “ஆயிர” மலை என்பது தான் ஐவர் மலையில்உள்ள கல்வெட்டு கூறும் தகவல்” என்கிறார் ஒரு நண்பர்.

மேலும் பழனி மலை முருகன் சிலையை நவ பாஷாணத்தால் உருவாக்கியவரான போகர் இங்கிருந்து தான் முருகன் சிலையை செய்துள்ளார். அதாவது போகருக்கு பிரம்மகத்தி தோடம் பிடித்துக்கொண்டது. இந்த தோசம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார். வேள்வியின் முடிவில் புவனேசுவரி அம்மன் தோன்றி, இந்த தோசம் போக வேண்டுமானால் நவபாஷாணத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து, அந்த முருகன் சிலையைப் பழனியில் வைத்து வழிபடும்படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பைத் தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.