Tag Archives: திருவனந்தபுரம்

அருள்மிகு அநந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம்

அருள்மிகு அநந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம் – 695001, கேரளா மாநிலம்.

+91-471-245 0233 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 4.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்    –    அனந்த பத்மநாபன்
தாயார்    –    ஸ்ரீஹரிலஷ்மி
தீர்த்தம்    –    மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள்
பழமை    –    1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்    –    திருவனந்தபுரம்
மாவட்டம்    –    திருவனந்தபுரம்
மாநிலம்    –    கேரளா

trivandrum-moolavar_anantha_padmanaaban460வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், “உண்ணீ. (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு” எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, “பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத்தான் வரவேண்டும்” எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார்.