Tag Archives: சிறுகுடி

அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில், சிறுகுடி

அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில், சிறுகுடி– 624 404, திண்டுக்கல் மாவட்டம்
****************************************************************************************************

மூலவர்: – முத்தாலம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – சிறுகுடி

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் தெய்வ வழிபாடும் பக்தியும் கொண்டு, நீதி,நேர்மை நிலைக்க அரசாட்சி மேற்கொண்டு வந்தார் மாமன்னர் திருமலை நாயக்கர். இவரின் கீழ், நத்தத்தைத் தலைநகராக்கி ஆட்சி செலுத்திய ஜமீன் சருகு துந்துமி லிங்கமநாயக்கரின் முயற்சியால் சிறுகுடியில் இக்கோயில் கட்டப்பட்டது. ஐயனார் மலையில் மணக்கோலத்தில் மலையலங்கார சுவாமியையும் செம்பாயி அம்மனையும் மற்றும் பரிவார தெய்வங்களையும் மண்ணினால் செய்து கட்டப்பட்டது. இதற்குப் பராமரிப்புக்காக நில புலன்களை மானியம் கொடுத்து திருப்பணியை நிறைவேற்றினர்.

சிறுகுடி, பசுமை நிறம் கொண்ட மலைகளால் சூழப் பட்டது. வாழை, மா, தென்னை நிறைந்து பயன் தரும் சோலைகள் நிறைந்தது. இங்கு வான் மழை முறையாக பெய்யும். நீர் வளம் சேரப்பெற்றதால் நிலவளம் நிறைந்தது. இவ்வாறு திகழும் இவ்வூரின் மையப்பகுதியில் அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது.