Tag Archives: கடத்தூர்

அர்ச்சுனேஸ்வரர் கோயில், கடத்தூர்

அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் கோயில், கடத்தூர், கோவை மாவட்டம்

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

இறைவன்: அர்ச்சுனேஸ்வரர்

அம்மன் : கோமதியம்மை

விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் காரத்தொழுவு என்ற கிராமத்தில் இருந்து கொங்கேலசங்கு என்ற கிராமத்திற்கு தினமும் 60 குடம் பால் சென்றுகொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குடம் பால் மட்டும் சிந்தியது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது ரத்தம் பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலந்து இரத்த ஆறாக மாறிவிட்டது. பயந்துபோன மக்கள் அவ்விடத்தை ஆராய்ந்துபார்த்தனர். பால் விழுந்த இடத்தைத் தோண்டியபோது உள்ளே ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் தலையில் வெட்டுப்பட்டிருந்தது. இப்போதும் இந்த லிங்கத்தின் தலையில் வெட்டுக்காயம் இருக்கிறது. சுயம்பு இலிங்கமாக வெளிப்பட்ட சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார். பத்தாம் நூற்றாண்டில் இந்த கோயில் எழுப்பப்பட்டது.