Tag Archives: பர்வதமலை

மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில், பர்வதமலை

அருள்மிகு மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில், பர்வதமலை, கடலாடி, திருவண்ணாமலை மாவட்டம்.

+91-94426 72283

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மல்லிகார்ஜுனசுவாமி
அம்மன் பிரமராம்பாள்
தீர்த்தம் பாதாளச் சுனைத் தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் பர்வதமலை
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

வாசலில் பச்சையம்மாள் காவல் தெய்வமாக இருக்கிறாள். அவளது கோவிலின் வாசலில் ஏழு முனிகள் அமர்ந்துள்ளனர். சிலைகள் அப்படியே முனீஸ்வரனை ஒத்திருந்தன. மலையடிவாரத்தில் இருக்கும் வீரபத்திரரையும் வழிபட்டு மலையேறத்துவங்கவேண்டும். பாதி தூரத்திற்கு அழகாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த படிக்கட்டுகளைக் கடப்பதற்குள் மூச்சு வாங்கும். நெட்டுக்குத்தாக மலை அமைந்திருக்கிறது. பாதிதூரம் கடந்ததும், கரடுமுரடான மலைக்காட்டுப்பாதை துவங்குகிறது. அதில் பாதிதூரம் சென்றால், வெறும் மொட்டைமலை நெடுநெடுவென செங்குத்தாக உயர்ந்து நிற்கிறது. மாபெரும் திரிசூலங்களும், ஆணிகளும், தண்டுக்கால் கம்பிகளுமே உள்ளன.


ஒவ்வொரு வளைவிலும் மலையடிவாரம் விதவிதமான கோணத்தில் கண்கொள்ளாக் காட்சியாக தெரிகிறது. ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாகப் பொத்தினாள். அப்படி பொத்தியது சில நொடிகள்தான். அதற்குள் பூமியில் பலகோடி வருடங்கள் ஓடிவிட்டன. விஷயமறிந்த சிவபெருமான் உடனே தனது நெற்றிக்கண்ணைத் திறந்துவைத்து பூமிக்கும், பிரபஞ்சத்துக்கும் ஒளி கொடுத்து காப்பாற்றிவிட்டார். அதனால், சிவபெருமான் பார்வதியை நோக்கி,”நீ பூமிக்குப்போய் என்னை நினைத்து கடும்தவம் செய்; அதுதான் உனக்குத் தண்டனைஎன அனுப்பியிருக்கிறார்.