Tag Archives: அரசூர்

அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில், அரசூர்

அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில், அரசூர், தஞ்சாவூர் மாவட்டம்.

தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்திற்கு முற்பட்ட காலத்துக் கோயிலாகக் கருதப்படுகிறது அரசூர் அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில். “சோழ வம்சாவழியில் கடைசியாக அரசாண்ட மன்னர்கள் புதுப்பித்த கோயில் இதுஎன்றும் சிலர் கூறுகிறார்கள். சோழ, பல்லவ, நாயக்க, மராட்டிய காலக் கட்டமைப்புடன் இவ்வாலயம் காட்சியளிக்கின்றது என்பது, இங்கே குறிப்பிடத் தக்க தகவல்.

சுவாமி, அம்மன் சந்நிதிகளின் விமானங்கள் திராவிடக் கட்டிடக் கலையின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. அர்த்த மண்டப விதானங்கள், காரை சுண்ணாம்பு கலந்து உருவாக்கப்பட்டு மராட்டிய மரபுடன் காட்சியளிக்கின்றன. முன் மண்டபம் மிகப் பெரிய அகலமான தூண்கள் தாங்கி நிற்கும் வகையில் பிரம்மாண்டமாக விளங்குகிறது. இது நாயக்கர் கால சாயலில் உள்ளது. கோயிலில் ஆங்காங்கே காணப்படும் சிறிய சிறிய வேலைப்பாடுகள் பல்லவ கட்டிடக் கலையை சார்ந்திருக்கின்றன.