Tag Archives: சண்முகபுரம்

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், சண்முகபுரம்

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், சண்முகபுரம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4259 – 229 054(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரஆஞ்சநேயர்
தீர்த்தம் பாலாறு
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சண்முகபுரம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

இராமரின் மனைவி சீதையை இராவணன் இலங்கைக்கு கடத்திச்சென்ற போது, அவரது சீடரான ஆஞ்சநேயர் சீதையைச் சந்திக்க இலங்கைக்கு சென்றார். இலங்கையில் சீதாதேவியை சந்தித்த ஆஞ்சநேயர் தற்போது கோயில் அமைந்துள்ள பாலாற்றின் வழியாகத் திரும்பினார். அவர் பறந்து சென்ற வழியின் கீழே பாலாற்றங்கரையில் உள்ள பாறையில் தங்கி ஓய்வெடுத்த பாறையில் சுயம்புவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிற்காலத்தில், இப்பகுதியை சோழமன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஆற்றின் நடுவே ஆஞ்சநேயர் சுயம்புவாக இருந்தது கண்டறியப்பட்டு தொடக்கத்தில் சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக செவிவழிச்செய்தி கூறுகிறது.