Tag Archives: உதகை

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை – 643 001, நீலகிரி மாவட்டம்.

+91-423-244 2754 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல்  இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் மகா மாரியம்மன் , மகா காளியம்மன்
தீர்த்தம் அமிர்தபுஷ்கரணி
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் உதகை
மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

அந்த நாளில் ஊட்டி நகரில் வணிகர்கள் கூடியிருந்த போது இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க கண்களும், தெய்வீக மணம் கமழும் முகமும் சாந்தமே உருவெடுத்த தோற்றமும் கொண்ட அவர்கள் தாங்கள் தங்க இடம் கேட்டனர்.

அப்போது அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது. அருகில் இருந்த மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அப்போது மின்னல் கீற்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தோன்றி மறைந்தது. அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர். அதன்பின்பே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர்.

அதிலிருந்து இக்கோயில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.