Tag Archives: பழனி

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில், பழனி

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில், பழனி, திண்டுக்கல் மாவட்டம்.

+91-4545 – 242 293, 242 236, 242 493 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

மூலவர் தண்டாயுதபாணி, நவபாஷாண மூர்த்தி
உற்சவர் முத்துக்குமாரசுவாமி
தல விருட்சம் நெல்லி மரம்
தீர்த்தம் சண்முக நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர் திருஆவினன்குடி
ஊர் பழநி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளைப் பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், “குழந்தை வேலாயுதர்என்று பெயர் பெற்றார். பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், “பழம் நீ” (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், “பழநிஎன மருவியது.