Tag Archives: பிட்சாண்டார்கோயில்

அருள்மிகு பஞ்சமுக விநாயகர் கோயில், பிட்சாண்டார்கோயில்

அருள்மிகு பஞ்சமுக விநாயகர்_கோயில், பிட்சாண்டார்கோயில், திருச்சி மாவட்டம்

காலை மணி 9-00 முதல் 10-30 மணி வரை மாலை மணி 6-00 முதல் 7-30 மணி வரை

புராண வரலாறுகளில் விநாயகரின் வடிவங்களில் 32 வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும், அவர் அடியார்களுக்காக எடுத்த திருமேனியின் வேறுபாட்டை விளக்குவது. எடுத்த காரியங்கள் இடையூறின்றி நிறைவேறவும், சகல கிரக தோடங்கள் நீங்கிடவும், ஹேரம்ப கணபதி என்கிற அருள்மிகு பஞ்சமுக விநாயகரைத்தான் வழிபடுகின்றனர். ஹேரம்ப என்றால் எளியவர்க்கு அருள்புரியும் நாயகன் என்ற பொருளாகும். கணபதி அவதாரங்களில் ஹேரம்ப கணபதி என்பவரே அருள் வழங்கும் கணபதியாக விளங்குகிறார் என்றும் புராணங்கள் கூறுகிறன்றன. பஞ்சமுகங்களின் தத்துவமே ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், இறைத்தல் என்பவையாகும். இவ்வளவு பெருமைகள் வாய்ந்த அருள்மிகு பஞ்சமுக விநாயகரை வழிபட்டு அறம், பொருள், இன்பம், வீடுகளை பெற்று பலனடையலாம்.