Tag Archives: திருப்பாற்கடல்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் போஸ்ட்,காவேரிப்பாக்கம் வாலாஜாபேட்டை தாலுக்கா, வேலூர் மாவட்டம்.

+91 4177 254 929, 94868 77896, 94861 39289

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
உற்சவர்
தாயார் அலர்மேல் மங்கை
தல விருட்சம் வில்வம்,துளசி
தீர்த்தம் புண்டரீக தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நாராயண சதுர்வேதி மங்கலம்
ஊர் திருப்பாற்கடல்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

புண்டரீக மகரிஷி பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோயிலுக்கு பதிலாக சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர் வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான், என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாகப் பிரசன்னமாகி தரிசனம் தந்து,”சிவன் வேறு, விஷ்ணு வேறு கிடையாது; இரண்டும் ஒன்று தான்என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,”ரிஷியே! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும்என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக, பெருமாள் பிரசன்னமானதால் இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆனார். இவளுடன், அலர்மேலு மங்கை தாயார் அருள் செய்கிறாள்.