Tag Archives: எண்கண்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், எண்கண்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம்.

+91 4366-269 965, 94433 51528

(மாற்றங்களுக்குட்பட்டவை)

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஆதிநாராயணப்பெருமாள்

உற்சவர்

ஆதிநாராயணப்பெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தல விருட்சம்

வன்னி

ஆகமம்

வைகானசம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

சமீபனம், வன்னிமரக்காடு

ஊர்

எண்கண்

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஒருமுறை பிருகு முனிவர் சமீவனம் (வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர் ஒருவர் தன் படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட வந்தார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. கோபமடைந்த முனிவர், அரசனை நோக்கி, “முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தவத்தைக் கலைத்தாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்என சாபமிட்டார். வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார். மனம் இரங்கிய முனிவர், “மிருகசீரிட சக்திகள் நிறைந்த எண்கண் தலத்தில், தைப்பூசத்தன்று விருத்த காவேரி எனப்படும் வெட்டாற்றில் நீராடி வழிபாடு செய்து வரவேண்டும். கருடன்மீது பெருமாள் அமர்ந்து காட்சி அளிக்க, மயில்மீது மால் மருகன் முருகனும் காட்சி அளிக்கும்போது உனது சாபம் நீங்கும்கூறினார். “மேலும், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், மேஷ வாகனம் போன்ற 108 வித வாகனங்கள் செய்து இறைவனுக்குப் பெருவிழா நடத்த வேண்டும்என்றும் நல்வழி காட்டினார். முனிவர் கூறியவாறே மன்னன் பூஜைகள் நிகழ்த்தி இறைப்பணிகள் செய்து நல்லருளைப் பெற்று சிங்க முகம் நீங்கப் பெற்றான். இதன்காரணமாக இத்தலம் மிருகசீரிட நட்சத்திரத்திற்குரிய கோயிலாக போற்றப்படுகிறது.

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம்.

+91 -4366-278 531, 278 014, 94884 15137

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரம்மபுரீஸ்வரர்இது ஒரு சிவத்தலம் என்றாலும் இங்கு சுப்ரமணியசுவாமி பிரதானம்

உற்சவர்

சுப்ரமணியசுவாமி

அம்மன்

பெரியநாயகி

தலவிருட்சம்

வன்னிமரம்

தீர்த்தம்

குமாரதீர்த்தம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

சமீவனம்

ஊர்

எண்கண்

மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப்பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை முருகன் சிறையிலடைத்தார். பிரம்மாவின் சிருஷ்டித் தொழிலையும்தானே ஏற்றார். இதனால் பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை தனது எட்டுக் கண்களால் பூஜித்தார். சிவபெருமான் பிரம்மாவின் முன் தோன்றினார். நடந்தவைகளைக் கூறி, தனது படைத்தல் தொழிலை திரும்பப் பெற்றுத் தர பிரம்மா வேண்டுகிறார். சிவபெருமான் முருகனை அழைத்து படைப்புத்தொழிலை பிரம்மாவிடம் தருமாறு கூறகிறார். பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியாத பிரம்மன் படைத்தல் தொழிலை செய்வது முறையல்ல என்று கூறி முருகன் தர மறுக்கிறார். சிவபெருமான் முருகனை சமாதானப்படுத்தி தனக்கு முன்பு பிரணவ மந்திர உபதேசம் செய்தது போல் பிரம்மாவிற்கும் உபதேசம் செய்து பின்பு படைப்பு தொழிலைத் தரும்படி பணிக்கிறார். முருகனும் இத்தலத்தில் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்து தென்முகக் கடவுளாய் அமர்ந்து உபதேசித்து சிருஷ்டித் தொழிலை திரும்பவும் பிரம்மாவிடம் தந்தார். பிரம்மா எட்டுக் கண்களால் (எண்கண்) பூஜித்தமையால் இத்தலம் பிரம்மபுரம்என்று வழங்கப்பட்டது என தலபுராணம் கூறுகிறது. எட்டுக் கண்கள் – “எண்கண்.”