Tag Archives: அனுவாவி

அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அனுவாவி

அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அனுவாவி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-94434 77295, 98432 84842 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்ரமணியர்

தலவிருட்சம்

மாமரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அனுவாவி

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைச் சுமந்து கொண்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்குத் தாகம் ஏற்பட்டது. அவர் இம்மலையில் உள்ள முருகப்பெருமானை வேண்டினார். அனுமனின் வேண்டுதலுக்கு மனமிரங்கிய முருகன், தன் வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார். கந்தப் பெருமான் வழிபாடு இராமாயண காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு வால்மீகி ராமாயணம் எடுத்துக்காட்டு. இராமன் விட்ட அம்புகள் கந்தனின் வேல் போல் பிரகாசித்ததாக 2 இடங்களில் சொல்லப் பட்டுள்ளது.


ஹனுஎன்றால் ஆஞ்சநேயர். “வாவிஎன்றால் ஊற்று, நீர்நிலை என்று பொருள். அனுமனுக்காக தோன்றிய ஊற்றாதலால் இத்தலம் ஹனுவாவிஎன்று பெயர் பெற்று தற்போது அனுவாவிஆகிவிட்டது. அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் அனுமக்குமரன் மலைஎன்ற பெயரும் உண்டு.

இங்குள்ள ஊற்று நீரின் ஆரம்பம் எங்குள்ளது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை. அதனால், மைசூர் மன்னன் ஒருவன் இங்குள்ள ஊற்றை காணாச்சுனைஎன பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளான். எந்த காலத்திலும் வற்றாத இந்த புனித நீர் பக்தர்களின் தாகம் தீர்க்கிறது. திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சுவாமியின் சிரசில் பூ வைத்து, ஒரு செயலைத் துவங்கலாமா என பார்க்கும் பழக்கம் உள்ளது.