Tag Archives: திருத்தங்கல்

அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல்

அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருது‌நகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கருநெல்லிநாதர் (சொக்கப்பன்)

அம்மன்

சொக்கி

தலவிருட்சம்

கருநெல்லி

தீர்த்தம்

அர்ச்சுனாநதி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப்பெயர்

திருத்தங்கால்

ஊர்

திருத்தங்கல்

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்னும் முருக பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஆண்டுதோறும் பழனிக்கு சென்று தண்டாயுதபாணிக் கடவுளை தரிசிப்பது வழக்கம். தள்ளாத வயதில் ஒரு சமயம் பாதயாத்திரை‌ மேற்கொண்ட போது குறுக்கிட்ட வாய்க்காலை கடக்க முடியாமல் அங்கேயே தங்கி இறைவன் கட்டளைப்படி பூஜை செய்தார். பூஜை செய்ய அடுப்பு மூட்டக் குழி தோண்டிய போது தங்கத் காசுகள் கிடைக்க முருகனருளால் கிடைத்த அக்காசுகளை வைத்து முருகனுக்கே கோயில் கட்டினார். பழனி முருகன் போல் திருத்தங்கல் பழனியாண்டி அருள் சக்தி கொண்டவராய் இப்பகுதி மக்களால் ‌‌கொண்டாடப்படுகிறார்.

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்-626 130, விருதுநகர் மாவட்டம்.

+91- 94426 65443 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்)
தாயார் செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி)
தீர்த்தம் பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி
ஆகமம் வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருத்தங்கல்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

பகவான் நாராயணன் திருப்பாற்கடலில் சயனித்திருந்த போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள்,”மற்ற தேவிகளைக்காட்டிலும் எங்கள் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். இவளே அதிர்ஷ்ட தேவதை. இவளே மகாலட்சுமி(ஸ்ரீ)என்று அழைக்கப்படுபவள். தேவர்களின் தலைவன் இந்திரன் இவளால்தான் பலம் பெறுகிறான். வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்ற திருநாமங்கள் உண்டு. பெருமாள் இவளை தன் வலது மார்பில் தாங்குகிறார்என்று புகழ்பாடினர். பூமாதேவியின் தோழியரோ,”இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூமிதேவியே. அவள் மிகவும் சாந்தமானவள். பொறுமை நிறைந்தவள். பொறுமைசாலிகளை வெல்வது அரிது. இவளைக்காப்பதற்காகவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார். அப்படியெனில் இவளது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்என்று பாராட்டினர்.