Tag Archives: அழகப்பன் நகர்

மூவர் திருக்கோயில், அழகப்பன் நகர், மதுரை

அருள்மிகு மூவர் திருக்கோயில், அழகப்பன் நகர், மதுரை.

+91 94431 06262

காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவன்
அம்மன் பார்வதி, சரஸ்வதி, லட்சுமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் அழகப்பன் நகர், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களை இறைவன் செய்கிறார். இதைக் குறிக்கும் வகையில் இந்தக் கோயிலில் படைப்புக்கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களது தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. எனவே, இது மூவர் ஆலயம் எனப்படுகிறது. இங்குள்ள விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வவளமும், வேண்டிய காரியசித்தியையும் அருளும் விதத்தில் உள்ளதால் செல்வ சித்தி விநாயகர்எனப் பெயர் பெற்றுள்ளார்.