Tag Archives: திருப்பரங்குன்றம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவில், திருப்பரங்குன்றம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.            

+91- 452- 248 2248, 248 2648, 98653- 70393, +91-98421- 93244, +91-94433 – 82946 (மாற்றங்களுக்குட்பட்டவை)                         

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்

சண்முகர்

அம்மன்

தெய்வானை

தல விருட்சம்

கல்லத்தி

தீர்த்தம்

லட்சுமி தீர்த்தம், சரவணப் பொய்கை உட்பட 11 தீர்த்தங்கள்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

தென்பரங்குன்றம்

ஊர்

திருப்பரங்குன்றம்

மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இந்த நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது. சூரனை வெற்றி கொண்ட முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானையைத் திருமணம் செய்து தர சம்மதித்தார். அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் வந்தனர். நாரதர் முன்னிலையில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. இதேகோலத்தில் சுவாமி இங்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமிஎன்ற பெயர் சூட்டப்பட்டது.

இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலைஎன பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. “திரு + பரம் + குன்றம்.” பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகத் திருப்பரங்குன்றம்என ஆயிற்று.

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.

+91- 452- 248 2248, 248 2648, 98653- 70393, 98421- 93244, 94433 – 82946 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சத்தியகிரீஸ்வரர்(பரங்குன்றநாதர்)
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் ஆவுடைநாயகி
தல விருட்சம் கல்லத்தி
தீர்த்தம் லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள்
ஆகமம் காமிகம், காரணம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தென்பரங்குன்றம்
ஊர் திருப்பரங்குன்றம்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர்

மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி துர்க்கையம்மன் இங்கு வந்து இலிங்க வடிவ மலையாக இருக்கும் சிவனைத் தவம் செய்து வணங்கினாள். மேலும் மலையிலேயே ஒரு இலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தோஷத்தை போக்கியருளினார்.